| விரித்த பந்தர் பிரித்தது ஆம் என, மீன் ஒளித்தது - வானமே. |
சிரித்த பங்கயம் ஒத்த - மலர்ந்த தாமரைப் பூக்களைப் போன்ற; செங்கண்திருமாலை இராமனை - சிவந்த கண்களையுடைய திருமாலாகிய இராமபிரானது; கரிக் கரம்பொரு அக் கைத்தலத்து - யானையினது துதிக்கையை நிகர்ந்த அந்தக் கையில்; உயர்காப்பு நாண் - சிறந்த மங்கல நாணை; அணிதற்கு முன் - பூண்பதற்கு முன்னமே; இம் மண் அனைத்தும் நிழற்ற - இவ்வுலகம் முழுவதும் நிழல் செய்யும் வண்ணம்; வரித்ததண் கதிர் முத்தது ஆகி- கட்டின குளிர்ந்த கிரணங்களையுடைய முத்து வரிசைகளையுடையதாய்; மேல் விரித்த - வானத்தில் பரப்பி வேயப்பட்டிருந்த; பந்தர் - பந்தல்; பிரித்தது ஆம் என- பிரிக்கப்பட்டது போல; வானம் - ஆகாயம்; மீன் ஒளித்தது- விண்மீன்களோடு மறைந்தது. வானத்தையே பந்தலாகவும், விண்மீன்களை முத்துச்சரங்களாகவும் கொண்டு, காலையில் விண்மீன்கள்மறைவதைப் பந்தலைப் பிரிக்கையில் முத்துச்சரங்கள் அகற்றப்பெற்றன போன்றிருந்தது என்றார்.இது தற்குறிப்பேற்றம். மங்கல நிகழ்ச்சிகளுக்கு முன், அதற்குரிய தலைவன் வலங்கையில்காப்புக் கயிறு (இரட்சா பந்தனம்) கட்டுதல் மரபு. சிரித்த பங்கயம் - இல்பொருள் உவமை. இராமனை - இராமனுக்கு; வேற்றுமை மயக்கம். 54 மகளிர் எழுதல் 1545. | ‘நாம விற் கை இராமனைத் தொழும் நாள் அடைந்த நமக்கு எலாம், காம விற்கு உடை கங்குல் மாலை கழிந்தது’ என்பது கற்பியா, தாம் ஒலித்தன பேரி; அவ் ஒலி, சாரல் மாரி தழங்கலால், மா மயில் குலம் என்ன, முன்னம் மலர்ந்து எழுந்தனர், மாதரே, |
நாம வில் கை இராமனை - பகைவர்க்கு அச்சத்தைத் தரும் கோதண்டம் ஏந்திய கையையுடையஇராமனை; தொழும் நாள் அடைந்த நமக்கு எலாம் - வணங்கும் நல்ல நாளைப் பெற்ற நம்அனைவர்க்கும்; காமன் விற்கு உடை கங்குல் மாலை - மன்மதனது கரும்பு வில்லுக்குத் தோற்றுத்துன்புறுதற்கு இடமான இராப்பொழுது; கரித்தது - நீங்கியது; என்பது கற்பியா -என்பதைத் தெரிவித்துக் கொண்டு; பேரி ஒலித்தன - முரசங்கள் ஒலித்தன; அவ் ஒலி- அந்த ஓசை; சாரல் மாரி தழங்கலால்- மலைப் பக்கங்களில் தங்கிய |