| வாய் அடங்கின என்ன வந்து குவிந்த - வண் குமுதங்களே. |
சாய் அடங்க - தன் பெருமை அழியவும்; நலம் கலந்து தயங்கு தன்குல நன்மையும்- நன்மை பொருந்தி விளங்குகின்ற தனது குலத்தின் சிறப்பும்; போய் அடங்க - கெட்டழியவும்; நெடுங் கொடும் பழி கொண்டு - நெடுங்காலம் நிற்பதாகிய கொடிய பழியையேற்றும்; அரும் புகழ் சிந்தும் - பெறுதற்கரிய புகழைச் சிதறுகின்ற; அத் தீ அடங்கிய சிந்தையாள்-அந்தக் கொடுமை பொருந்திய மனத்தையுடைய கைகேயியினது; செயல் கண்டு - தகாத செயலைப்பார்த்து; சீரிய நங்கைமார் வாய் - சிறந்த பெண்களின் வாய்கள்; அடங்கின என்ன- அடங்கி மூடினாற்போல; வண் குமுதங்கள் - வளப்பத்தையுடைய செவ்வாம் பல் மலர்கள்;வந்து குவிந்த - (இதழ்கள் கூடி) மூடின. ஆம்பல் மலர் காலையில் குவிதல் இயற்கை நிகழ்ச்சி. அது கைகேயியின் கொடுமை கண்டு குலப்பெண்டிர்வாயடங்கியிருந்தாற்போன்று இருந்தது என்பது தற்குறிப் பேற்றம். பழி கொண்டு புகழ் சிந்தினாள்என்பது மாற்றுநிலை அணி (பரிவர்த்தனாலங்காரம்). தீ - உலமவாகு பெயர்; தீப்போலும் கொடுமையைக்குறித்தது. 57 1548. | மொய் அராகம் நிரம்ப, ஆசை முருங்கு தீயின் முழங்க, மேல் வை அராவிய மாரன் வாளியும், வான் நிலா நெடு வாடையும், மெய் அராவிட, ஆவி சோர வெதும்பு மாதர்தம் மென் செவி, பை அரா நுழைகின்ற போன்றன - பண் கனிந்து எழு பாடலே. |
மொய் அராகம் நிரம்ப - அடர்ந்த காம வேட்கை மனத்தில் நிறையும்படியும்; ஆசை முருங்கு தீயின் முழங்க - ஆசை கிளர்ந்த எரியும் நெருப்பைப் போல மிகுந்திடுமாறும்; மேல் - வெளியே; வை அராவிய மாரன் வாளியும்- கூர்மை செய்யப்பட்ட மன்மதன்அம்புகளும்; வான் நிலா நெடு வாடையும்- விண்ணில் நிலவும் நீண்ட வாடைக்காற்றும்; மெய் அராவிட - உடலை அறுத்தலால்; ஆவி சோர - உயிர் தளர; வெதும்பும்மாதர்தம் மென்செவி - வாடுகின்ற மகளிருடைய மெல்லிய காதுகளில்; பண் கனிந்து எழுபாடல் - இசை முதிர்ந்து எழுகின்ற பாடல்கள்; பை அரா நுழைகின்ற போன்றன - படத்தையுடைய பாம்புகள் நுழைவனவற்றை ஒத்தன; கணவனைப் பிரிந்த மாதரை மாரன் அம்புகளும், வாடைக் காற்றும் இரவில் வருத்த. காலையில்எழுந்த பாடல்கள் அவ் வருத்தத்தை மிகுவித்துத் |