பக்கம் எண் :

146அயோத்தியா காண்டம்

மனத்தில் பொருந்திய வலிமையோடு; ஊடல் கண்டவர் - தத்தம் கணவன்
மாரோடு புலந்தவர்கள்; ஆடகம் தரு பூண் முயங்கிட அஞ்சி அஞ்சி -
(கணவன்மார்) தம் மார்பில் அணிந்தபொன்மாலையோடு தழுவுவதற்கு
(மகளிர் மார்பில் ) உறுத்துமே என்று மிகவும் அச்சம் கொண்டு;
அனந்தரால் - மனத்தடுமாற்றத்தோடு;  ஏடு அகம் பொதி தார்
புனைந்திட -
  பூக்களால்கட்டிய மாலையை அணிந்துகொள்ள;  யாம
பேரி இசைத்தலால் -
அப்பொழுது  கடையாமம் கழிந்ததைஅறிவிக்கும்
முரசம் ஒலித்தலால்;  நையும் மைந்தர்கள் உய்ய - மனைவியரின்
ஊடலால்வருந்தும் கணவன்மார் அத்துன்பத்தினின்றும் தப்பும்படி;  கூடல்
கண்டிலர் -
கூடி  மகிழ்தலைப்பெற்றாரில்லை.

     மகளிரின் ஊடலைக் கணவன்மார் போக்குவதற்கு முன்னே யாமம்
கழிந்ததால் அம்மகளிர் கூடல்பெறாமல் பிரிந்தனர்.  ஊடல் - கணவனும்
மனைவியும் ஓர் அமளியில் இருக்கும்போது,  கணவனிடத்துப்புலத்தற்கும்
காரணம் இல்லாமல் இருந்தும்,  மிகுந்த காதலால் ஒரு காரணத்தைக்
கற்பித்துக்கொண்டுமனைவி மனம் மாறுபட்டு நிற்றல்.  மைந்தர் உய்யக்
கூட்டம் நிகழாமையால் மகளிரும் வாடினர் என்பது விளங்கும்.         61

பல்வகை ஒலிகள்  

1552.தழை ஒலித்தன; வண்டு ஒலித்தன;
     தார் ஒலித்தன; பேரி ஆம்
முழவு ஒலித்தன; தேர் ஒலித்தன;
     முத்து ஒலித்து எழும் அல்குலார்
இழை ஒலித்தன; புள் ஒலித்தன;
     யாழ் ஒலித்தன; - எங்கணும் -
மழை ஒலித்தனபோல் கலித்த,
     மனத்தின் முந்துறு வாசியே.

     எங்கணும் - நகரின் எல்லா இடங்களிலும்;  தழை ஒலித்தன -
பீலிக்குஞ்சங்கள்விளங்கின;  வண்டு ஒலித்தன - வண்டுகள் ஆரவாரம்
செய்தன; தார் ஒலித்தன -மலர்மாலைகள் விளங்கின; பேரி ஆம் முழவு
ஒலித்தன -
மலர்மாலைகள் விளங்கின; பேரிஆம் முழவு ஒலித்தின -
பேரிகை ஆகிய வாத்தியங்கள் ஒலித்தன;  தேர் ஒலித்தன -தேர்கள்
தெருவில் ஓடும்போது  ஒலி எழுப்பின;  முத்து  ஒலித்து  எழும்
அல்குலார் -
முத்துவடங்கள்உராய்ந்து ஒலி யெழுப்பும் இடையினையுடைய
பெண்களுடைய;  இழை ஒலித்தன - அணிகலன்கள் ஒலித்தன; புள்
ஒலித்தன -
பறவைகள் கூவின;  யாழ் ஒலித்தன - வீணைகள் இசைத்தன;
மனத்தின் முந்துறு வாசி - மனத்தின் வேகத்தைக் காட்டிலும் விரைந்து
ஓடும் குதிரைகள்; மழை ஒலித்தன போல் - மேகங்கள் முழங்கினாற்போல;
கலித்தன - ஒலித்தன.