மனத்தில் பொருந்திய வலிமையோடு; ஊடல் கண்டவர் - தத்தம் கணவன் மாரோடு புலந்தவர்கள்; ஆடகம் தரு பூண் முயங்கிட அஞ்சி அஞ்சி - (கணவன்மார்) தம் மார்பில் அணிந்தபொன்மாலையோடு தழுவுவதற்கு (மகளிர் மார்பில் ) உறுத்துமே என்று மிகவும் அச்சம் கொண்டு; அனந்தரால் - மனத்தடுமாற்றத்தோடு; ஏடு அகம் பொதி தார் புனைந்திட - பூக்களால்கட்டிய மாலையை அணிந்துகொள்ள; யாம பேரி இசைத்தலால் - அப்பொழுது கடையாமம் கழிந்ததைஅறிவிக்கும் முரசம் ஒலித்தலால்; நையும் மைந்தர்கள் உய்ய - மனைவியரின் ஊடலால்வருந்தும் கணவன்மார் அத்துன்பத்தினின்றும் தப்பும்படி; கூடல் கண்டிலர் - கூடி மகிழ்தலைப்பெற்றாரில்லை. மகளிரின் ஊடலைக் கணவன்மார் போக்குவதற்கு முன்னே யாமம் கழிந்ததால் அம்மகளிர் கூடல்பெறாமல் பிரிந்தனர். ஊடல் - கணவனும் மனைவியும் ஓர் அமளியில் இருக்கும்போது, கணவனிடத்துப்புலத்தற்கும் காரணம் இல்லாமல் இருந்தும், மிகுந்த காதலால் ஒரு காரணத்தைக் கற்பித்துக்கொண்டுமனைவி மனம் மாறுபட்டு நிற்றல். மைந்தர் உய்யக் கூட்டம் நிகழாமையால் மகளிரும் வாடினர் என்பது விளங்கும். 61 பல்வகை ஒலிகள் 1552. | தழை ஒலித்தன; வண்டு ஒலித்தன; தார் ஒலித்தன; பேரி ஆம் முழவு ஒலித்தன; தேர் ஒலித்தன; முத்து ஒலித்து எழும் அல்குலார் இழை ஒலித்தன; புள் ஒலித்தன; யாழ் ஒலித்தன; - எங்கணும் - மழை ஒலித்தனபோல் கலித்த, மனத்தின் முந்துறு வாசியே. |
எங்கணும் - நகரின் எல்லா இடங்களிலும்; தழை ஒலித்தன - பீலிக்குஞ்சங்கள்விளங்கின; வண்டு ஒலித்தன - வண்டுகள் ஆரவாரம் செய்தன; தார் ஒலித்தன -மலர்மாலைகள் விளங்கின; பேரி ஆம் முழவு ஒலித்தன - மலர்மாலைகள் விளங்கின; பேரிஆம் முழவு ஒலித்தின - பேரிகை ஆகிய வாத்தியங்கள் ஒலித்தன; தேர் ஒலித்தன -தேர்கள் தெருவில் ஓடும்போது ஒலி எழுப்பின; முத்து ஒலித்து எழும் அல்குலார் - முத்துவடங்கள்உராய்ந்து ஒலி யெழுப்பும் இடையினையுடைய பெண்களுடைய; இழை ஒலித்தன - அணிகலன்கள் ஒலித்தன; புள் ஒலித்தன - பறவைகள் கூவின; யாழ் ஒலித்தன - வீணைகள் இசைத்தன; மனத்தின் முந்துறு வாசி - மனத்தின் வேகத்தைக் காட்டிலும் விரைந்து ஓடும் குதிரைகள்; மழை ஒலித்தன போல் - மேகங்கள் முழங்கினாற்போல; கலித்தன - ஒலித்தன. |