பக்கம் எண் :

மந்திரப் படலம் 15

 பிறப்பு எனும் பெருங் கடல்
     பிழைக்கல் ஆகுமோ?

     இம்மை யாவர்க்கும் - இப்பிறப்பிலே எவர்க்கும் ;  இறப்பு எனும்
மெய்ம்மையை
- சாவு உண்டு என்னும் உண்மையை ;  மறப்பு எனும்
அதனின்மேல்
- மறத்தல் என்னும் அதற்கு மேற்பட ;  கேடு மற்று
உண்டோ -
கெடுதல் வேறு உண்டோ? (இல்லை) ;  துறப்பு எனும்
தெப்பமே
- துறத்தல் என்னும்மிதவையே ;  துணை செய்யாவிடின் -
உதவி செய்யாவிட்டால் ;  பிறப்புஎனும் பெருங்கடல் - பிறப்பு என்னும்
பெரிய கடலினின்று ;  பிழைக்கல் ஆகுமோ- தப்புதல் இயலுமேடா?
இயலாது.

     யாக்கை நிலையாமையை எஞ்ஞான்றும் மனத்துக் கொண்டால் அது
பிறவியைஒழித்தற்கு இன்றியமையாத துறவினை மேற்கொள்ளச்
செய்யும் ; செய்யவே, பிறவிப் பெருங்கடல்கடத்தலாகும் என்பது கருத்து.
காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருதலின் பிறவிப்
பெருங்கடல் என்றார். “பிறவிப் பெருங்கடல்” (குறள், 10) என்பர்
திருவள்ளுவரும். பிழைக்கல்- தப்புதல், உய்தல்.                    20

1334. ‘அருஞ் சிறப்பு அமைவரும் துறவும், அவ் வழித்
தெரிஞ்சு உறவு என மிகும் தெளிவும் ஆய், வரும்
பெருஞ் சிறை உள எனின், பிறவி என்னும் இவ்
இருஞ் சிறை கடத்தலின் இனியது யாவதோ?

     அருஞ் சிறப்பு அமைவரும் துறவும் - அரிய சிறப்புப் பொருந்திய
துறவும் ;  அவ் வழி தெரிஞ்சு - அந்த வழியை அறிந்து ;  உறபு என
மிகும்தெளிவும் ஆய்
- அதற்கு இனம் என்று சிறந்துள்ள மெய்யுணர்வும்
ஆகி ;  வரும்பெருஞ் சிறை உள எனின் - வருகின்ற பெரிய சிறகுகள்
உண்டானால் ;  பிறவிஎன்னும் இவ் இருஞ் சிறை - பிறப்பு என்னும்
இந்தப் பெரிய சிறைச்சாலையை ;  கடத்தலின் இனியது யாவதோ -
நீங்கிச் செல்லுவதினும் இனிமையான தொன்று வேறு எதுவோ?(எதுவும்
இல்லை).

     உயிராகிய பறவைக்குத் துறவு, மெய்யுணர்வு என்னும் இரு சிறகுகள்
முளைத்துவிட்டால் அது பிறவி ஆகிய கூண்டை விட்டுப் பறந்துவிடும்
என்பது கருத்து. அருஞ் சிறப்புஅமைவரும் - அடைவதற்கு அரிய
வீட்டினை அடைதற்குக் காரணமான எனலும் பொருந்தும். தெரிஞ்சு -
தெரிந்து என்பதன் போலி. திருவள்ளுவர் துறவையும் மெய்யுணர்தலையும்
அடுத்தடுத்து வைத்துள்ளமுறைமை துறந்தார்க்கே மெய்யுணர்வு தோன்றும்
எனத் தெரிவித்தல் ஈண்டுக் கருதத் தக்கது.                         21

1335. ‘இனியது போலும் இவ் அரசை எண்ணுமோ-
துனி வரு புலன் எனத் தொடர்ந்து தோற்கலா
நனி வரும் பெரும் பகை நவையின் நீங்கி, அத்
தனி அரசாட்சியில் தாழும் உள்ளமே?