அவ் ஊர் - அந்த அயோத்தி நகரத்தில் வாழும்; கற்பின் மிக்கார் மாதர்கள் - கற்பிற் சிறந்த முதிய மகளிர்கள்; கோசலை மனத்தை ஒத்தார் -இராமனுடையதாய் கோசலையின் மனம் போன்ற மனம் உடையவர் ஆயினர்; வேறு உள மகளிர்எல்லாம் - மற்ற இளம் பெண்கள் எல்லாம்; சீதையை ஒத்தார் - மகிழ்ச்சியில்சீதையைப் போன்றவர் ஆயினர்; அன்னாள் திருவினை ஒத்தாள் - அந்தச் சீதை இலக்குமியை ஒத்தவள்ஆயினாள்; வேதியர் வசிட்டன் ஒத்தார் - மறையவர்கள் வசிட்டமுனிவரைப் போன்றவர் ஆயினர்; சாதுகை மாந்தர் எல்லாம் - சாதுக்களான முதிய ஆடவர்எல்லாரும்; தயரதன் தன்னை ஒத்தார் - தயரத மன்னனைப் போன்றவர் ஆயினர். நகர மக்கள் அவரவர் தகுதிக்கேற்ப அடைந்த மகிழ்ச்சிபொருந்திய மனநிலை அழகுற எடுத்துக் காட்டப்படுகிறது. இராமன் முடுசூடுவது அரசத் திருவைமனத்தலாதலால் அத்திருமகள் மகிழ்வதுபோலச் சீதை மகிழ்ந்தாள் என்றார். 70 அரசர்கள் வருதல் 1561. | இமிழ் திரைப் பரவை ஞாலம் எங்கணும் வறுமை கூர, உமிழ்வது ஒத்து உதவு காதல் உந்திட, வந்தது அன்றே - குமிழ் முலைச் சீதை கொண்கன் கோமுடி புனைதல் காண்பான், அமிழ்து உணக் குழுழுகின்ற அமரரின். அரச வெள்ளம். |
அரச வெள்ளம் - அரசர்களின் பெருந்திரள்; குமிழ் முலைச் சீதை கொண்கன் -குவிந்த நகில்களையுடைய சீதைக்குக் கணவனாகிய இராமபிரான்; கோமுடி புனைதல் காண்பான்- அரசுக்குரிய மகுடம் சூட்டிக்கொள்ளுவதைக் காண்பதற்கு; உமிழ்வது ஒத்து உதவுகாதல் உந்திட - (உள்ளே நிறைந்து) புறம்பே வெளிப்படுவது போன்று மிகுகின்ற விருப்பம்தம்மைத்தூண்ட; அமிழ்து உணக் குழுமுகின்ற அமரரின் - அமுதத்தை உண்பதற்கு ஆவலோடுதிரண்ட தேவர்களைப் போல; இமிழ்திரைப் பரவை ஞாலம் - ஒலிக்கும் அலைகளையுடையகடலால் சூழப்பட்ட உலகம்; எங்கணும் வறுமை கூர - எல்லா இடத்தும் வெறுமையடையும்படி;வந்தது - வந்து கூடிற்று; அரசர் கூட்டத்திற்குத் தேவர் கூட்டத்தை உவமை கூறினார். உவமை அணி. பரவை - பரவிஇருப்பது; ஐ - வினைமுதல் விகுதி. அன்று, ஏ - அசைகள். 71 |