என்பாரும் - ஆடவர் தொகுதியே மிகுதி என்பவரும்; மகளிரே பெரிது என்பாரும் - பெண்டிர் தொகுதியேமிகுதி என்பவரும்; போந்ததே பெரிது என்பாரும் - வந்து சேர்ந்தவர் கூட்டமே மிகுதிஎன்பவரும்; புகுவதே பெரிது என்பாரும் - வரப்போகும் கூட்டமே மிகுதியாக இருக்கும் என்பவரும் ஆக; தேர்ந்ததே தேரின் அல்லால் - தாம் அறிந்ததையே அறிந்ததன்றி; யாவரே தெரியக் கண்டார் - எவர்தாம் முழுவதும் நன்றாய் அறிந்தவர்? (ஒருவருமில்லைஎன்றபடி). இதனால் ஒவ்வொரு குழுவும் அளவிட முடியாதவாறு மிகுதியாய் இருந்தது என்பது குறிக்கப்பட்டது. வேந்தர் முதலியவர் அவரவர் தொகுதிக்கு ஆகிவந்தனர்; ஆகுபெயர். பெரிது என்னும் ஒன்றன்பால் வினைமுடிபுக்கு ஏற்ப அவ்வாறு கொள்ளல் வேண்டும். மகளிரைப் பின்னர்க் குறித்தமையின்மாந்தர் என்பது அவர்களை நீக்கி ஆடவரை மட்டும் கூட்டியது. 73 மகளிர் கூட்டத்தின் வருகை 1564. | குவளையின் எழிலும், வேலின் கொடுமையும், குழைத்துக் கூட்டி, திவளும் அஞ்சனம் என்று ஏய்ந்த நஞ்சினைத் தெரியத் தீட்டி, தவள ஒண் மதியுள் வைத்த தன்மை சால் தடங் கண் நல்லார், துவளும் நுண் இடையார், ஆடும் தோகை அம் குழாத்தின் தொக்கார். |
குவளையின் எழிலும் - கருங்குவளை மலரின் அழகையும்; வேலின் கொடுமையும் - வேற்படையின் கொலைத் தன்மையையும்; குழைத்துக் கூட்டி - ஒன்றாய்க் கலந்து சேர்த்து; திவளும் அஞ்சனம் என்று ஏய்ந்த- விளங்குகின்ற மை என்று பெயர்பொருந்திய; நஞ்சினைத் தெரியத் தீட்டி - விடத்தை விளங்கப் பூசி ; தவளஒன்மதியுள் வைத்த தன்மை சால் - வெள்ளிய ஒளிமிக்க சந்திரனிடத்தில் வைத்தாற்போன்றதன்மை அமைந்த; தடங் கண் நல்லார் - பெரிய கண்களையுடைய அழகியவரும்; துவளும் நுண் இடையார்-துவளுகின்ற மெல்லிய இடையினையுடையவரும் ஆகிய மகளிர்; ஆடும் தோகைஅம் குழாத்தின் - நடனமாடும் ஆழகிய மயிற்கூட்டம் போல; தொக்கார் - வந்துகூடினர். குவளையின் அழகையும் வேலின் கொடுமையையும் சேர்த்து, மையாகிய நஞ்சினைப்பூசி, மதியுள்வைத்தன போலும் கண்கள் என்பது இல்பொருள் உவமை. ‘அஞ்சனம் என்று ஏய்ந்த நஞ்சு’ என்பது உருவகம். தோகை - ஆகுபெயர். 74 |