யாகிய கைகேயியும்; ஆங்கே கொணர்க எனச் செப்பினாள் - அவனிடம் உன்னை அழைத்து வருமாறு சொன்னாள்; அப் பொன்தட மகுடம் சூட- (ஆதலால்) அந்தப் பொன்னால் ஆகியபெரிய முடியை (நீ) சூடுவதற்கு; விரைவின் போதி - விரைவாக வருவாய்;’ என்றான் -என்று சுமந்திரன் சொன்னான். கொணர்கென - தொகுத்தல் விகாரம்; அகரம் தொக்கது. அவை - அவ்வை; தாய்; இடைகுறைந்தது. 85 இராமன் தேரில் ஏறிச் செல்லுதல் 1576. | ஐயனும், அச் சொல் கேளா, ஆயிர மெளிலியானைக் கைதொழுது, அரச வெள்ளம் கடல் எனத் தொடர்ந்து சுற்ற, தெய்வ கீதங்கள் பாட, தேவரும் மகிழ்ந்து வாழ்த்த, தையலார் இரைத்து நோக்க, தார் அணி தேரில் சென்றான். |
ஐயனும் - இராமபிரானும்; அச் சொல்கேளா - அந்தச் சொற்களைக் கேட்டு;ஆயிரம் மௌலியானைக் கைதொழுது - ஆயிரம் திருமுடிகளையுடைய திருமாலை வணங்கி; அரசவெள்ளம் - அரசர் கூட்டம்; கடல் எனத் தொடர்ந்து சுற்ற - கடல் போலப் பின்தொடர்ந்து சூழவும்; தெய்வ கீதங்கள் பாட - கடவுளைப் போற்றும் இசைகளை இசைவாணர்கள் பாடிவரவும்; தேவரும் மகிழ்ந்து வாழ்த்த - (வானில் கூடிய) தேவர்களும்உவகைகொண்டு வாழ்த்தவும்; தையலார் இரைத்து நோக்க - மகளிர் ஆரவாரித்துத் தன்னைவிரும்பிப் பார்க்கவும்; தார் அணி தேரில் சென்றான் - மாலைகளால் ஒப்பனைசெய்யப்பட்ட தேரில் போனான். இராமன் சுமந்திரன் சொற்கேட்டுத் தன் குலதெய்வமான அரங்கநாதனைத் தொழுது தேரில் புறப்பட்டான். இரைத்தல் - மகிழ்ச்சியால் ஆரவாரித்தல். 86 மகளிர் செயல்கள் 1577. | திரு மணி மகுடம் சூடச் சேவகன் செல்கின்றான் என்று, ஒருவரின் ஒருவர் முந்த, காதலோடு உவகை உந்த, இரு கையும் இரைத்து மொய்த்தார்; இன் உயிர் யார்க்கும் ஒன்றாய்ப் |
|