பக்கம் எண் :

166அயோத்தியா காண்டம்

 ‘மைந்தே! நீ கோடி எங்கள்
     வாழ்க்கை நாள் யாவும்’ என்பார்;
‘ஐந்து அவித்து அரிதின் செய்த
     தவம் உனக்கு ஆக’ என்பார்;
‘பைந் துழாய்த் தெரியலாய்க்கே
     நல்வினை பயக்க’ என்பார்.

     இவ் உலகம் உய்ந்தது  என்பார் - (அவர்களுள்) இந் நிலவுலகம்
கரைமரம்சேர்ந்தது என்பார் சிலர்;  ஊழி காண்கிற்பாய் என்பார் - நீ
ஊழியின் முடிவு கண்டுவாழ்வாய் என்பார் சிலர்; மைந்த - ஐயனே;
எங்கள் வாழ்க்கை நாள் யாவும் நீகோடி என்பார் - எங்கள் ஆயுள்
முழுவதையும் நீ எடுத்துக்கொள்வாய் என்பார் சிலர்;  ஐந்து  அவித்து
அரிதின் செய்த தவம் -
நாங்கள் ஐம்புலன்களையும் அடக்கி அரிதாகச்
செய்த தவத்தின் பயன்;  உனக்கு ஆக என்பார் - உனக்கு அரிதாகச்
செய்த தவத்தின்பயன்;  உனக்கு ஆக என்பார் - உனக்கு உளதாகுக
என்பார் சிலர்;  பைந் துழாய்த்தெரியலாய்க்கே - பசிய துளசிமாலையை
அணிந்த  உனக்கே; நல்வினை பயக்க என்பார் - புண்ணியம்
உண்டாவதாக என்பார் சிலர்.

     மக்கள் அனைவரும் தங்கள் ஆர்வம் தோன்ற இராமபிரானை
வெவ்வேறு  முறையில்வாழ்த்தினர்.  ‘எங்கள் வாழ்க்கை நாள் யாவும் நீ
கோடி”  என்பதனோடு  “யான் வாழு நாளும்பண்ணன் வாழிய”  (புறம்.
173)  என்பது  ஒப்பு நோக்கத் தக்கது.  ஐந்து  என்னும்  முற்றும்மை
விகாரத்தால் தொக்கது.                                         92

1583.‘உயர் அருள் ஒண் கண் ஒக்கும்
     தாமரை, நிறத்தை ஒக்கும்
புயல் பொழி மேகம், என்ன
     புண்ணியம் செய்த’ என்பார்;
‘செயல் அருந் தவங்கள் செய்து, இச்
     செம்மலைத் தந்த செல்வத்
தயரதற்கு என்ன கைம்மாறு
     உடையம் யாம் தக்கது?’ என்பார்.

     ‘உயர் அருள் ஒண்கண் ஒக்கும்  தாமரை -  மிகுந்த கருணை
நிறைந்த ஒளிபடைத்தஇவன் கண்களைப் போன்ற தாமரை மலரும்;
நிறத்தை ஒக்கும் புயல்பொழி மேகம் -திருமேனியின் நிறத்தைப்
போன்ற நீரைப் பொழியும் கார் மேகமும்;  என்ன புண்ணியம்செய்த
என்பார் -
  என்ன நல்வினை புரிந்தன’  என்று  கூறுவார் சிலர்;  செயல்
அருந்  தவங்கள் செய்து -
பிறரால் செய்வதற்கு முடியாத தவங்களைச்
செய்து;  இச் செம்மலைத்தந்த - இந்த நம்பியைப் பெற்று (நமக்குக்)
கொடுத்த;  செல்வத் தயரதற்கு -பேற்றினையுடைய சக்கரவர்திக்கு;
தக்கது - அவர் செய்த நன்றிக்குத் தக்கதான;  என்ன கைம்மாறு யாம்