உடையம் - எந்த மறு உதவி உடையராய் இருக்கின்றோம்?; என்பார் - என்று கூறுவர் சிலர். இராமன் கண்ணழகிலும் மேனியழகிலும் ஈடுபட்டு அவற்றிற்கு உவமையாகும் தகுதிபெற்ற தாமரையையும், மேகத்தையும் புகழ்ந்தனர் சிலர், இராமனைப் பெற்றுத் தந்த தயரதன் தந்தகொடைக்கு ஈடாக எந்தக் கைம்மாறும் நம்மால் செய்ய இயலாது நன்றியால் நிறைந்தனர் சிலர். புயல் - நீருக்கு இலக்கணை. 93 1584. | ‘வாரணம் அரற்ற வந்து, கரா உயிர் மாற்றும் நேமி நாரணன் ஒக்கும், இந்த நம்பிதன் கருணை’ என்பார்; ஆரணம் அறிதல் தேற்றா ஐயனை அணுகி நோக்கி, காரணம் இன்றியேயும், கண்கள் நீர் கலுழ நிற்பார். |
இந்த நம்பிதன் கருணை - இந்தக் குணங்களால் நிறைந்தவனாகிய இராமபிரானதுதிருவருள்; வாரணம் அரற்ற வந்து - முதலை வாய்ப்பட்ட கயேந்திரன் என்னும் யானைஆதிமூலமே என்று கதற அங்குத் தோன்றி; கரா உயிர் மாற்றும் - முதலையின் உயிரைப்போக்கிய; நேமி நாரணன் (கருணை) ஒக்கும் - சக்கரப் படையையுடைய திருமாலின்திருவருளை ஒத்ததாகும்; என்பார்- என்று கூறுவர் சிலர்; ஆரணம் அறிதல் தேற்றா- மறைகளும் இனையன் என்று அறிய இயலாத; ஐயனை அணுகி நோக்கி- (திருமாலாகிய)இராமபிரானை நெருங்கி நன்கு பார்த்து; காரணம் இன்றியேயும் - (அன்பு தவிர வேறு) காரணம் இல்லாமலே; கண்கள் நீர் கலுழ நிற்பார் - கண்களிலிருந்து நீர் சொரியநிற்பார் சிலர். நாரணன் - நாராயணன் என்பதன் சிதைவு. நாரணன் என்பதன் பின்னும் கருணை என்பதனைப்பிரித்துக் கூட்டுக. காரணமின்றிக் கண்ணீர் சொரிந்தனர் என்பது அவர்களது பரவசநிலையினைக்காட்டும். 94 1585. | ‘நீல மா முகில் அனான்தன் நினையினோடு அறிவும் நிற்க. சீலம் ஆர்க்கு உண்டு? கெட்டேன்? தேவரின் அடங்குவானோ? காலமாக் கணிக்கும் நுண்மைக் கணக்கையும் கடந்து நின்ற மூலம் ஆய், முடிவு இலாத மூர்த்தி இம் முன்பன்’ என்பார். |
|