நீல மா முகில் அனான்தன் - கரிய பெரிய மேகத்தைப் போன்ற இராமபிரானது; நிறையினோடு அறிவு நிற்க - நிறையும் பேரறிவும் ஒருபுறம் இருக்க; சீலம் ஆர்க்கு உண்டு- அவனது நீர்மைக்குணம் வேறு எவருக்கு உண்டு? (ஒருவர்க்கும் இல்லை); இம் முன்பன் -இந்த முன்னவனாகிய இராமபிரான்; தேவரின் அடங்குவானோ - தேவர்களுள் ஒருவனாய் அமைவானோ? (அமையான்); காலமாக் கணிக்கும் - கால அளவாகக் கணக்கிடப்படுகின்ற; நுண்மைக் கணக்கையும் கடந்து நின்ற - நுட்பமாகிய எண்களையும் கடந்து அப்பால் நின்ற;மூலம் ஆய் - முதற்பொருளாகி; முடிவிலாத மூர்த்தி - அழிவில்லாத பரம்பொருள் ஆவான்; கெட்டேன் - (இதனை உணராமல் இது காறும்) ‘கெட்டேன்’; என்பார் - என்று சொல்வர் சிலர். இராமனுடைய நிறையும் அறிவும் அல்லாமல், நீர்மையே அவனைப் பரம் பொருள் என்பதனைக்காட்டிக்கொடுக்கிறது. அதனை அறியாமல் நாளைப் பழுதே போக்கினேனே’ என்று தனித்தனியேதன்னிரக்கம் கொண்டனர் சிலர். நிறை - தன் நெஞ்சைத் தடுத்து நிறுத்தும் திறன். சீலம் - உயர்த்தார், தாழ்ந்தார்என்னும் வேறுபாடின்றி நீரோடு நீர் கலந்தாற்போல இரண்டறக் கலந்து பழகுதல். இப்பாட்டின்பின்னிரண்டு அடிகளின் கருத்துப் பின்னும் “மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத்து ஆய, காலமும் கணக்கும் நீத்த காரணன்” (1584) என இடம் பெறுதல்காணலாம். 95 1586. | ‘ஆர்கலி அகழ்ந்தோர், கங்கை அவனியில் கொணர்ந்தோர், முந்தைப் போர் கெழு புலவர்க்கு ஆகி அசுரரைப் பொருது வென்றோர். பேர்கெழு சிறப்பின் வந்த பெரும் புகழ் நிற்பது, ஐயன் தார் கெழு திரள் தோள் தந்த புகழினைத் தழுவி’ என்பார். |
ஆர்கலி அகழ்ந்தோர் - கடலைத் தோண்டியவரும்; கங்கை அவனியில்கொணர்ந்தோர் - ஆகாய கங்கையை உலகத்திற்குக் கொண்டுவந்தவரும்; முந்தை -பழமையாகிய; போர் கெழு புலவர்க்கு ஆகி - (அசுரரோடு) போர்மிக்க தேவர்களுக்குத்துணையாகி; அகரரைப் பொருது வென்றோர்- அசுரர்களைப் போரிட்டு வெற்றிபெற்றவரும் (ஆகிய இக் குலத்து முன்னோர் பலருக்கும்); பேர் கெழு சிறப்பின் வந்த - விளங்குகின்ற மேன்மையோடு உண்டாகிய; பெரும் புகழ் நிற்பது - மிக்க கீர்த்திநிலைத்து நிற்பது; ஐயன் தார் கெழு - இராமபிரானது வெற்றிமாலை பொருந்திய; திரள்தோள்தந்த புகழினை - திரண்ட தோள்கள் உண்டாக்கிய கீர்த்தியை; தழுவி -தழுவியே யாம்; என்பார். |