பக்கம் எண் :

168அயோத்தியா காண்டம்

     நீல மா முகில் அனான்தன் - கரிய பெரிய மேகத்தைப் போன்ற
இராமபிரானது; நிறையினோடு அறிவு நிற்க - நிறையும் பேரறிவும்
ஒருபுறம் இருக்க;  சீலம் ஆர்க்கு உண்டு- அவனது  நீர்மைக்குணம்
வேறு எவருக்கு உண்டு?  (ஒருவர்க்கும் இல்லை);  இம் முன்பன் -இந்த
முன்னவனாகிய இராமபிரான்;  தேவரின் அடங்குவானோ - தேவர்களுள்
ஒருவனாய் அமைவானோ? (அமையான்);  காலமாக் கணிக்கும் - கால
அளவாகக் கணக்கிடப்படுகின்ற; நுண்மைக் கணக்கையும் கடந்து நின்ற -
நுட்பமாகிய எண்களையும் கடந்து  அப்பால் நின்ற;மூலம் ஆய் -
முதற்பொருளாகி;  முடிவிலாத மூர்த்தி - அழிவில்லாத பரம்பொருள்
ஆவான்; கெட்டேன் - (இதனை உணராமல் இது காறும்) ‘கெட்டேன்’;
என்பார் - என்று  சொல்வர் சிலர்.

     இராமனுடைய நிறையும் அறிவும் அல்லாமல்,  நீர்மையே அவனைப்
பரம் பொருள் என்பதனைக்காட்டிக்கொடுக்கிறது. அதனை அறியாமல்
நாளைப் பழுதே போக்கினேனே’ என்று  தனித்தனியேதன்னிரக்கம்
கொண்டனர்  சிலர்.

     நிறை - தன் நெஞ்சைத் தடுத்து நிறுத்தும் திறன். சீலம் - உயர்த்தார்,
தாழ்ந்தார்என்னும் வேறுபாடின்றி நீரோடு நீர் கலந்தாற்போல இரண்டறக்
கலந்து பழகுதல்.  இப்பாட்டின்பின்னிரண்டு அடிகளின் கருத்துப் பின்னும்
“மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத்து ஆய, காலமும் கணக்கும்
நீத்த காரணன்”  (1584)  என இடம் பெறுதல்காணலாம்.             95

1586.‘ஆர்கலி அகழ்ந்தோர், கங்கை
     அவனியில் கொணர்ந்தோர், முந்தைப்
போர் கெழு புலவர்க்கு ஆகி
     அசுரரைப் பொருது வென்றோர்.
பேர்கெழு சிறப்பின் வந்த
     பெரும் புகழ் நிற்பது, ஐயன்
தார் கெழு திரள் தோள் தந்த
     புகழினைத் தழுவி’ என்பார்.

     ஆர்கலி அகழ்ந்தோர் - கடலைத் தோண்டியவரும்; கங்கை
அவனியில்கொணர்ந்தோர் -
ஆகாய கங்கையை உலகத்திற்குக்
கொண்டுவந்தவரும்; முந்தை -பழமையாகிய;  போர் கெழு புலவர்க்கு
ஆகி -
(அசுரரோடு) போர்மிக்க தேவர்களுக்குத்துணையாகி; அகரரைப்
பொருது வென்றோர்-
அசுரர்களைப் போரிட்டு வெற்றிபெற்றவரும் (ஆகிய
இக் குலத்து முன்னோர் பலருக்கும்);  பேர் கெழு சிறப்பின் வந்த -
விளங்குகின்ற மேன்மையோடு உண்டாகிய;  பெரும் புகழ் நிற்பது - மிக்க
கீர்த்திநிலைத்து  நிற்பது;  ஐயன் தார்  கெழு - இராமபிரானது
வெற்றிமாலை பொருந்திய;  திரள்தோள்தந்த புகழினை - திரண்ட
தோள்கள் உண்டாக்கிய கீர்த்தியை;  தழுவி -தழுவியே யாம்;  என்பார்.