வீரன் - வீரனாகிய இராமன்; மின் பொருவு தேரின்மிசை - மின்னலையொத்த தேரின்மீது ஏறிவரும்போது; ஆ - பகவானது; தன் பொருவு இல் கன்று -தனது ஒப்பற்ற கன்று; தனி தாவி வரல் கண்டாங்கு - தனியே துள்ளிக் குதித்து வருதலைப்பார்த்தபோது; அன்பு உருகு சிந்தையொடும் - அன்பினால் கரைகின்ற மனத்தோடு; உருகுமா போல் - உருகும் வகைபோல; என்பு உருகி - உடம்பு நெகிழ்ந்து; நெஞ்சு உருகி - மனம் உருகி (நிற்பதன்றி); உருககில்லார்யார் - உருகாமல் வன்மையோடுநின்றவர் யார்? (எவரும் இலர்). இராமனைக் கண்ட எல்லாரும் தம்மையறியாமலே அவன்மீது அன்பு தோன்றி உள்ளமும் உடலும்உருகி நிற்பர் என்றவாறு. கண்டாங்கு - தொகுத்தல் விகாரம், அகரம் தொக்கது. உருகுமா போல்- உருகுமாறுபோர்ல; ஆ - ஆறு என்பதன் விகாரம். பின்னிரண்டு அடிகளில் உருகுதல் என்ற சொல் பலமுறை ஒரே பொருளில் வந்தது சொற்பொருட் பின்வருநிலை அணி. 98 1589. | ‘சத்திரம் நிழற்ற, நிமிர் தானையொடு நானா அத்திரம் நிழற்ற, அருளொடு அவனி ஆள்வார், புத்திரர் இனிப் பெறுதல் புல்லிது’ என, நல்லோர். சித்திரம் எனத் தனி திகைத்து, உருகி, நிற்பார். |
நல்லோர் - நற்பண்புடையவர்; சத்திரம் நிழற்ற - வெண்கொற்றக்குடைநிழலைச் செய்யவும்; நிமிர் தானையொடு - பெருகிய சேனையுடன்; நானா அத்திரம்நிழற்ற - பல்வகைப் படைகளும் ஒளிவீசவும்; அருளோடு அவனி ஆள்வார் - அருளுடன்பூமியை ஆளும் அரசர்கள்; இனி - இராமபிரான் பிறந்த பின்பு; புத்திரர் பெறுதல் புல்லிது - மைந்தர்களைப் பெறுவது சிறுமையுடையது; என - என்று சொல்லி; திகைத்து - திகைத்தும்; உருகி - மனம் உருகியும்; சித்திரம் என நிற்பார் -ஓவியம்போல் அசைவற்று நிற்பர், இராமனைப் போன்ற பிள்ளையை இனி எவரும் பெறல் அரிது என்பது கருத்து. அத்திரங்கள்எய்வன, எறிவன, குத்துவன, வெட்டுவன எனப் பல வகைப்படுதலால் ‘நானா அத்திரம்’ என்றார்.நிழல் - சாயை, ஒளி என்னும் இருபொருள் தருவது. 99 1590. | ‘கார் மினொடு உலாயது என நூல் கஞலும் மார்பன், தேர்மிசை, நம் வாயில் கடிது ஏகுதல் செய்வானோ? கூர் கனக ராசியொடு கோடி மணியாலும் தூர்மின், நெடு வீதியினை’ என்று சொரிவாரும். |
|