பக்கம் எண் :

கைகேயி சூழ்வினைப் படலம் 171

     கார் மினொடு உலாயது என - மேகம் மின்னலொடு உலாவியது
போல;  நூல் கஞலும்மார்பன் - முப்புரி நூல் விளங்கும் மார்பையுடைய
இராமபிரான்;  நம் வாயில் -நமது வீட்டு வாயில் வழியாக;  தேர்மிசை -
தேரின்மேல்;  கடிது ஏகுதல் செய்வானோ- வேகமாகக் கடந்து
சென்றுவிடுவானோ?; கூர் கனக ராசியொடு - (அத்தேரைத்தடுப்பதற்காக)
மிகுந்த பொற்குவியலோடு; கோடி மணியாலும் - அளவற்ற மனணிகளாலும்;
நெடு வீதியினைத் தூர்மின் - பெரிய தெருவினை நிரப்புங்கள்;  என்று
சொரிவாரும் -
என்று சொல்லிக்கொண்டு அவற்றைக் கொட்டுவாரும் சிலர்.

     இராமன் வடிவழகைக் காண அவனது தேர் விரைந்து செல்லாதபடி
பொன்னையும் மணியையும்வழியில் கொட்டும்படி சொல்லிச் சிலர்
அவற்றைப் பொழிந்துவைத்தனர். கார் - இராமன்திருமார்பிற்கும்,
மின்னல் முப்புரி நூலுக்கும் உவமை.                             100

1591.‘தாய் கையில் வளர்ந்திலன்;
     வளர்த்தது, தவத்தால்
கேகயன் மடந்தை; கிளர்
     ஞாலம் இவன் ஆள,
ஈகையில் உவந்த அவ்
     இயற்கை இது என்றால்,
தோகை அவள் பேர் உவகை
     சொல்லல் அரிது?’ என்பார்.

     தாய் கையில் வளர்ந்திலன் - இராமபிரான் ஈன்ற  தாயாகிய
கோசலையின் கையில்வளர்ந்தானில்லை; வளர்ந்தது - அவனை வளர்த்தது;
தவத்தால் கேகயன் மடந்தை -முன்செய்த தவப்பயனால் கேகயமன்னன்
மகளாகிய கைகேயியை;  கிளர் ஞாலம் இவன் ஆள -(அதனால்)
விளங்குகின்ற நாட்டினை இவ் இராமன் ஆள; ஈகையில் உவந்த -
கொடுப்பதில்(பெற்ற தாய்போல) மகிழ்ச்சியுற்ற;  இயற்கை இது என்றால்-
(அவளது) தன்மைஇதுவாயின்; தோகை அவள் பேர் உவகை - அக்
கைகேயியினது பெருங்களிப்பு;  சொல்லல்அரிது - சொல்லுதல் முடியாது;
என்பார் - என்று கூறுவார்கள்.

     இராமனை வளர்த்தவன் கைகேயியாதலின் அவளுக்கே மிக்க மகிழ்ச்சி
உண்டு என்றனர்சிலர்.  அவள் இந்நாள் வரை  இராமனிடம் பேர்புன்
கொண்டவனாய் இருந்தமையை அனைவரும்அறிவராதலின் இவ்வாறு
கூறினர்.                                                     101

1592.‘பாவமும் அருந் துயரும் வேர் பறியும்’ என்பார்;
‘பூவலயம் இன்று தனி அன்று; பொது’ என்பார்;
‘தேவர் பகை உள்ளன இவ் வள்ளல் தெறும்’ என்பார்;
‘ஏவல் செயும் மன்னர் தவம் யாவது கொல்?’ என்பார்.