பக்கம் எண் :

172அயோத்தியா காண்டம்

     பாவமும் அருந் துயரும்- இவன் ஆளப்போவதால் தீ வினைகளும்
தீர்த்தற்கரியதுன்பங்களும்; வேர் பறியும் என்பார் - அடியோடு அழியும்
என்பார்;  பூவலயம் -இந்தப் பூமண்டலம்; இன்று தனி அன்று -
இப்பொழுது  இராமன் ஒருவனுக்கே தனியுரிமை உடையதுஅன்று;  பொது
என்பார் -
எல்லார்க்கும் பொதுவுடைமை ஆகும் என்பார்;  தேவர் பகை
உள்ளன -
தேவர்களுக்குப் பகையாய் உள்ள அரக்கர் கூட்டங்களை;  இவ்
வள்ளல் தெரும் என்பார் -
இவ் இராமன் அழிப்பான் என்பார்;  ஏவல்
செயும் மன்னர் -
இவனுக்குஏவல் செய்யும் அரசர்களது;  தவம் யாவது
கொல் என்பார் -
நல்வினை எத்தன்மையதோஎன்பார்.

     இராமன் ஆட்சியில் தம் பாவமும் துயரும் தீரும் என்றார் சிலர்.
இராமன் மக்கள்குறைகளைக் கேட்டறிந்து, அவர்கள் தாமே ஆட்சிபுரிந்தால்
எவ்வாறு நன்மையைப் பெறலாமோஅவ்வாறு நன்மையைப் பெறச்செய்வான்
என்னும் உறுதிப்பாட்டால் ‘பூவலயம் இன்று  தனி அன்று; பொது’ என்றார்
சிலர்.  இராமன் ஆளும்போது  தாங்களே ஆளுவதாகக் கருதினர்
என்பதாம்.                                                   102

1593.ஆண்டு, இனையராய் இனைய கூற, அடல் வீரன்,
தூண்டு புரவிப் பொரு இல் சுந்தர மணித் தேர்,
நீண்ட கொடி மாட நிரை வீதி நிறையப் போய்,
பூண்ட புகழ் மன்னன் உறை கோயில் புகலோடும் -

     ஆண்டு - (நகரமக்கள் வீதியாகிய) அவ்விடத்து;  இனையராய் -
இத்தன்மையராகி; இனைய கூற - இத்தன்மையனவற்றைச்
சொல்லிக்கொண்டிருக்க;  அடல்வீரன் - வெற்றி வீரனாகிய இராமபிரான்;
தூண்டு புரவி - (சுமந்திரனால்)செலுத்தப்பட்ட குதிரைகள் பூட்டப்பட்ட;
பொரு இல் சுந்தர மணித் தேர் - ஒப்பற்றஅழகிய மணிகள் கட்டிய
தேரில்;  நீண்ட கொடி மாட நிரை வீதி - உயர்ந்தகொடிகளையுடைய
மாளிகை வரிசையினையுடைய தெரு;  நிறையப் போய் - நிறைவாக
விளங்கும்படிசென்று;  புகழ்பூண்ட மன்னன் உறை கோயில் - புகழை
ஆபரணமாக அணிந்துள்ள தயரதன்தங்குகின்ற அரண்மனையை; 
புகலோடும் - அடைந்த அளவில்.

     இனையர், இனைய - குறிப்பு வினையாலனையும் பெயர். புகலோடும்
-
உம்மீற்று வினையெச்சம்.                                     103

அரண்மனையில் இராமன் அரசனைக் காணாமை  

1594.ஆங்க வந்து அடைந்த அண்ணல்,
     ஆசையின் கவரி வீச,
பூங் குழல் மகளிர் உள்ளம்
     புதுக் களி ஆட, நோக்கி,