| பெய் வளைத் தளிரால் பிசையும்; புகை வெய்து உயிர்க்கும்; விழுங்கும், புழுங்குமால். |
(கோசலை), கையைக் கையின் நெரிக்கும் - கையை மற்றொரு கையால் நெரிப்பாள்;தன்காதலன் வைகும் - தன் மகளாகிய இராமன் தங்கிய; ஆல் இலை அன்ன வயிற்றினைப்பெய் வளைத்தளிரால் பிசையும் - ஆல் இலை போன்ற தன் வயிற்றைத் தனது வளையல் அணிந்ததளிர் போன்ற கைகளால் விசைவாள்; புகை வெய்து உயிர்க்கும் - உள் நெருப்பால்புகையோடு கூடிய வெப்ப மூச்சு விடுவாள்; விழுங்கும் - அவ் உயிர்ப்பை அடக்குவாள்; புழுங்கும் - வெம்பிப் போவாள். கோசலையின் துயரத் துடிப்பின் மெய்ப்பாடுகள் இங்கு அடுக்கியுள்ளன. ‘ஆல்’ஈற்றசை. 10 1616. | ‘நன்று மன்னன் கருணை’ எனா நகும்; நின்ற மைந்தனை நோக்கி, ‘நெடுஞ் சுரத்து என்று போவது? எனா எழும்; இன் உயிர் பொன்றும் போது உற்றது உற்றனள் போலுமே. |
‘மன்னன் கருணை நன்று’ எனா நகும் - ‘சக்கரவர்த்தி உன்பால் காட்டிய இரக்கம்மிக நன்றாய் இருந்தது’ என்று சிரிப்பாள்; நின்ற மைந்தனை நோக்கி - தன் எதிரேநின்ற இராமனைப் பார்த்து; ‘நெடுஞ் சுரத்துப் போவது என்று’ எனா எழும் - நீண்டகாட்டு வழியில் போவது எப்போது என்று சொல்லி எழுந்திருப்பாள்; இன் உயிர் பொன்றும்போது உற்றது - இனிய உயிர் போகும்போது அடைகின்ற மரண வேதனையை; உற்றனள் போலும் - தற்போது அடைந்தாள் போல ஆனாள். தானும் உடன் செல்வாள்போல எழுவாளாயினள் என்க. சாவுத்துயர் அடைந்தாள் என்பதாம். ‘ஏ’ஈற்றசை. 11 1617. | ‘அன்பு இழைத்த மனத்து அரசற்கு, நீ என் பிழைத்தனை?’ என்று, நின்று ஏங்குமால் - முன்பு இழைத்த வறுமையின் முற்றினோர், பொன் பிழைக்கப் புலம்பினர் போலவே. |
‘அன்பு இழைத்த மனத்து அரசற்கு - உன்னிடத்துப் பேரன்பு செய்துவந்து மனத்தை உடையதயரத சக்கரவர்த்திக்கு; நீ என் பிழைத்தனை’ - நீ என்ன தவறு செய்தாய்;’ என்றுநின்று - என்று சொல்லிக் கொண்டு; முன்பு இழைத்த வறுமையின் முற்றினோர் - முற்பிறவியிற் |