செய்த வினையால் இப்போது வறுமையில் வாடியவர்கள்; பொன் பிழைக்க- எதிர்பாராமல்கிடைத்த பொன்னானது தவறியதால்; புலம்பினர் போல- புலம்பியவர்களைப் போல; ஏங்கும் - வருந்து வாள் ஆயினள். பெறாது பெற்ற செல்வமாகிய புத்திரப் பேற்றைப் இப்போது காட்டிற்கு அனுப்பி இழக்கநேர்ந்தபடியால் வறுமையில் வாடியவர் பொன்னைப் பெற்று அதுவும் கைநழுவியபோது வருந்துவது போலவருந்தினாள் என உவமை கூறினார் - பொன் தவறிப்போக இருக்க அதைத் திரும்ப இறுக்க மூடிப்பிடிப்பவர் எனவும், பொன் தவறிப் போகப் பொதிந்தனர் - அதாவது முகத்தை மூடிக்கொண்டுஅழுபவர் போல எனவும், பொன் தவறிப்போகும்படி வைத்திருந்தவர் போல எனவும் பொருள் கூறுவது உண்டு, ஏற்பது கொள்க. ‘ஆல்’, ‘ஏ’ அசைகள். 12 1618. | ‘அறம் எனக்கு இலையோ?’ எனும்; ‘ஆவி நைந்து இறவு அடுத்தது என், தெய்வதங்காள்?’ எனும்; பிற உரைப்பது என்? கன்று பிரிந்துழிக் கறவை ஒப்பக் கரைந்து கலங்கினாள். |
‘எனக்கு அறம் இலையோ’ எனும் - எனக்குத் தருமம் துணையாக இல்லையோ என்பாள்; தெய்வதங்காள் - தெய்வங்களே!; ஆவி நைந்து இறவு அடுத்தது என்? எனும் - உயிர்தேய்ந்து சாகும்படி வந்து நேர்ந்தது என்ன காரணம் என்பாள்; பிற உரைப்பது என்? -கோசலையின் அப்போதைய மனநிலைக்கு வேறு உவமை சொல்வது என்ன பயனுடைத்து; கன்று பிரிந்துழி கறவை ஒப்பக் கரைந்து கலங்கினாள் - தன் கன்று பிரிந்த பொழுது கறவை ஒப்பக்பசு துடிப்பதுபோல மனம் உருகித் கலங்கித் துடித்தாள். ‘இற அடுத்தது’ என அமைத்து ‘வ’ கரத்தை உடம்படுமெய்யாக்குதலே நன்று. ‘இற’ செயவென்வாய்பாட்டு வினையெச்சம். மரத்துப் போன பகக்கன்று பிரிந்துழிக் கலங்காது ஆதலின் ‘கறவை’என்னும் சொல்லால் ஈன்றணிமை உணர்த்தினார் என்க. 13 இராமன் கோசலைக்கு ஆறுதல் கூறுதல் 1619. | இத் திறத்தின் இடர் உறுவாள்தனைக் கைத்தலத்தின் எடுத்து, ‘அருங் கற்பினோய் பொய்த் திறத்தினன் ஆக்குதியோ? - புகல் - மெய்த் திறத்து நம் வேந்தனை, நீ?’ என்றான். |
(இராமன்) இத் திறத்தின் இடர் உறுவாள்தனை - இவ்வாறு சொல்லிப் புலம்பித்துன்பம் அடைகின்றவளாகிய கோசலைத் தாயை; கைத்தலத்தின் - கைகளால் தூக்கி; ‘அருங் கற்பினோய்! - பெண் |