டிர்க்கு அரிய கற்பினை உடையவளே; மெய்த்திறத்துத நம் வேந்தனை- உண்மைக் கூற்றில்ஒரு சிறிதும் பிறழாத நம் சக்கரவர்த்தியை; நீ பொய்த் திறத்தினன் ஆக்குதியோ? புகல்’ - சொன்ன சொல்லை மாற்றிக் கொள்ளும் பொய்த்தன்மை உடையவனாக நீசெய்துவிடுவாயோ, சொல்வாயாக; என்றான் -. சொன்னதைச் சொன்னவாறே நிறைவேற்றல் சத்தியமாம். ‘வனம்போகு’ என்ற பின்னர் வனம்போகாமல் இருந்தால் அரசன் சத்தியம் பாழாகும் என்பதைத் தாய்க்கு நினைவுறுத்தி, நாயகனைச்சத்தியத்தில் காப்பது நாயகியின் கற்புநலம் என்பதைக் குறிப்பால் புலப்படுத்தி‘அருங்கற்பினோய்’ என்று தாயை விளித்தானாம். 14 1620. | பொற்புறுத்தன, மெய்ம்மை பொதிந்தன, சொற்புறுத்தற்கு உரியன, சொல்லினான் - கற்பு உறுத்திய கற்பு உடையாள்தனை வற்புறுத்தி, மனம் கொளத் தேற்றுவான். |
கற்பு உறுத்திய கற்பு உடையாள்தனை - கற்பு என்பது இப்படிப் பட்டது என்பதைஉலகிற்கு உணர்த்தி நிறுத்திய பெருங் கற்பினை உடைய கோசலையை; வற்புறுத்தி - மனஉறுதிப்படுத்தி; மனம் கொள - மனத்தில் படும்படி; தேற்றுவான் - தெளியப்பண்ண வேண்டி; பொற்ப உறுத்தன -அழகு பொருந்தியனவும்; மெய்ம்மை பொதிந்தன -உண்மை நிரம்பியனவும்; சொற்புறுத்தற்கு உரியன - தாய்க்கு மகன் சொல்லுதற்குத் தகுந்தனவுமாகிய சொற்களைச்; சொல்லினான் - சொன்னான். கல்லின் தன்மை போல உறுதிப்பாடுடைய கற்பு என உரைப்பினும் அமையும். கற்பின் தன்மை உலகம் அறிய உணர்த்திய கற்பு என்பதைச் ‘சீலம் இன்னது என்று அருந்ததிக்கு அருளிய திருவேஎன்று (2061.) இராமன் சீதையை அழைப்பது கொண்டும் அறிக. 15 1621. | ‘சிறந்த தம்பி திரு உற, எந்தையை மறுந்தும் பொய் இலன் ஆக்கி, வனத்திடை உறைந்து தீரும் உறுதி பெற்றேன்; இதின், பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ? |
‘சிறந்த தம்பி திரு உற - (என்னிலும்) சிறந்த தம்பியாகிய பரதன் அரசச்செல்வம் பெற; எந்தையை - என் தந்தையாகிய தயரதனை; மறந்தும் பொய் இலன்ஆக்கி - மறப்பினாலும் பொய் சொல்லாத சத்திய வாக்கினனாகச் செய்து; வனத்திடை -காட்டில்; உறைந்து தீரும் உறுதி பெற்றேன் - வசித்துத் திரும்பி வருகின்ற நன்மையைஅடைந்தேன்; இதின் - இதைக்காட்டிலும்; யான் பிறந்து |