பெறும் பேறு என்பது யாவதோ?’ - யான் பிறவி எடுத்துப் பெறுகின்ற பாக்கியம் என்பது வேறு என்ன இருக்கிறது; (இல்லை). ‘பங்கம் இல் குணத்து எம்பி’ என்றது (1608.) போல இங்கும் ‘சிறந்த தம்பி’ என்றதுகாண்க. ‘யாவதோ’ ஓகாரம் வினாப் பொருளில் வந்தது. இனி, யாவது என்பதே வினாவாதலின்,‘ஓ’ காரம் எதிர்மறை குறித்தது எனினும் ஆம். 16 1622. | ‘விண்ணும் மண்ணும், இவ் வேலையும், மற்றும் வேறு எண்ணும் பூதம் எலாம் அழிந்து ஏகினும், அண்ணல் ஏவல் மறுக்க, அடியனேற்கு ஒண்ணுமோ? இதற்கு உள் அழியேல்’ என்றான். |
‘விண்ணும் - ஆகாயமும்; மண்ணும் - பூமியும்; இவ்வேலையும் - இந்தக் கடல்களும்; மற்றும் வேறு எண்ணும் பூதம் எலாம்- வேறாகிய தீ, காற்று முதலாகிய மூலப்பொருள்களும்; அழிந்து ஏகினும் - மாறுபட்டுக் கெட்டுப் போனாலும்; அண்ணல் - தயரதனது; ஏவல் - கட்டளையை; மறுக்க - மறுப்பதற்கு; அடியனேற்கு ஒண்ணுமோ - அடியேனுக்குத் தகுமோ; இதற்கு -; உன் அழியேல்’ -(நீ) மனம் வருந்தாதே;’ என்றான் -. ‘ஏகினும்’ என்பது அவை நிலை கெடாமை உணர்த்தி நின்றது - தயரதன் கட்டளையை அவ்வாறேநிறைவேற்றுதலே தனக்குத் தகுதி என்றான் இராமன். 17 கோசலை வேண்டுகோள் 1623. | ‘ஆகின், ஐய! அரசன்தன் ஆணையால் ஏகல் என்பது யானும் உரைக்கிலென்; சாகலா உயிர் தாங்க வல்லேனையும், போகின் நின்னொடும் கொண்டனை போகு’ என்றான். | ‘ஐய! - இராமனே!; ஆகின் - அப்படியானால்; அரசன்தன் ஆணையால் -அரசன் இட்ட கட்டளை என்பதால்; யானும் ஏகல் என்பது உரைக்கிலென் - நானும் நீ வனம் போகாதே என்பதைச் சொல்லவில்லை; போகின் - (நீ) வனம் போவதாயின்; சாகலா உயிர் தாங்க வல்லேனையும் - சாகாத இவ்வியிரத் தூக்கமாட்டால் சுமக்கின்றவளாகிய என்னையும்; நின்னொடும் கொண்டனை போகு’ - உன்னோடு அழைத்துக்கொண்டு போவாயாக;’ என்றான் -. ‘அரசன் கட்டளையைக் குடிமகன் மறுத்தல் கூடாது; ஆகையால், அதை நான் மறுக்கவில்லை,உன்னைப் பிரிந்து உயிரைச் சுமந்து என்னால் வாழ முடியாது; உயிர்போகவும் போகாது; ஆகையால்உன்னோடு என்னையும் காட்டிற்கு அழைத்துச் செல்’ என்றாள் கோசலை. ‘பரதன் அரசளாளுதல்,இராமன் |