பக்கம் எண் :

20அயோத்தியா காண்டம்

     திருமடந்தையும் மண்மடந்தையும் இராமனைத் தலைவனாக
அடைந்தமை, “பொன்உயிர்த்த பூமடந்தையும் புவி எனும் திருவும், இன்
உயிர்த்துணை இவன் என நினைக்கின்ற இராமன்”(1350) எனப் பின்னும்
சுட்டப்படுகிறது.                                               29

1343. ‘ஆதலால், இராமனுக்கு அரசை நல்கி, இப்
பேதைமைத்தாய் வரும் பிறப்பை நீக்குறு
மா தவம் தொடங்குவான் வனத்தை நண்ணுவேன் ; 
யாது நும் கருத்து?’ என, இனைய கூறினான்.

     ஆதலால் - ஆகையால் ; இராமனுக்கு அரசை நல்கி -
இராமனுக்கு அரசாட்சியை அளித்துவிட்டு ;  இப் பேதைமைத்தாய் வரும்
பிறப்பை
-இந்த அறியாமையை உடையதாக வரும் பிறவி நோயை ;
நீக்குறு மாதவம் தொடங்குவான்- நீக்குகின்ற பெரிய தவத்தைத்
தொடங்குவதற்காக ;  வனத்தை நண்ணுவேன் -கானகத்தை அடையப்
போகிறேன் ;  நும் கருத்து யாது - உங்கள் எண்ணம் யாது ; என -
என்று ;  இனைய கூறினான் - இத் தன்மையானவற்றைத் தெரிவித்தான்.

     பேதைமை - அறியாமை ;  அவிச்சை, அறியாமை நிறைந்தது மனிதப்
பிறப்பு என்பதனைத் திருவள்ளுவரும் “பிறப்பென்னும் பேதைமை” (358)
என்று புலப்படுத்தியுள்ளார்.தொடங்குவான் - ‘வான்’ ஈற்று எதிர்கால
வினையெச்சம். இனைய - குறிப்பு வினையாலணையும்பெயர். இராமனுக்கு
இளவரசுப் பட்டம் கட்டத் தயரதன் எண்ணியதாகவே முதல்நூல் கூறுகிறது.
இங்கோஅரசுரிமை ஏற்றலே பேசப்படுகிறது.                       30

மந்திரக் கிழவரின் மன நிலை  

கலிநிலைத்துறை

1344.திரண்ட தோளினன்
     இப்படிச் செப்பலும், சிந்தை
புரண்டு மீதிடப்
     பொங்கிய உவகையர், ஆங்கே
வெருண்டு, மன்னவன்
     பிரிவு எனும் விம்முறு நிலையால்,
இரண்டு கன்றினுக்கு
     இரங்கும் ஓர் ஆ என இருந்தார்.

     திரண்ட தோளினன் - பருத்த தோள்களை உடைய தயரத மன்னன்;
இப்படிச் செப்பலும் - இவ்வாறு கூறவும் ;  சிந்தை புரண்டு மீதிடப்
பொங்கிய உவகையர்
- (மந்திரக் கிழவர்) மனத்தினின்று பொங்கி மேலிட
வழிந்த மகிழ்ச்சியைஉடையவர்களாய் ;  ஆங்கே - அதே நேரத்தில் ;
மன்னவன் பிரிவு எனும்- தயரதன் பிரிவு என்கிற ; விம்முறு நிலையால்
வெருண்டு
- இரங்குதற்குரியநிலைமையால்