திருமடந்தையும் மண்மடந்தையும் இராமனைத் தலைவனாக அடைந்தமை, “பொன்உயிர்த்த பூமடந்தையும் புவி எனும் திருவும், இன் உயிர்த்துணை இவன் என நினைக்கின்ற இராமன்”(1350) எனப் பின்னும் சுட்டப்படுகிறது. 29 1343. | ‘ஆதலால், இராமனுக்கு அரசை நல்கி, இப் பேதைமைத்தாய் வரும் பிறப்பை நீக்குறு மா தவம் தொடங்குவான் வனத்தை நண்ணுவேன் ; யாது நும் கருத்து?’ என, இனைய கூறினான். |
‘ஆதலால் - ஆகையால் ; இராமனுக்கு அரசை நல்கி - இராமனுக்கு அரசாட்சியை அளித்துவிட்டு ; இப் பேதைமைத்தாய் வரும் பிறப்பை -இந்த அறியாமையை உடையதாக வரும் பிறவி நோயை ; நீக்குறு மாதவம் தொடங்குவான்- நீக்குகின்ற பெரிய தவத்தைத் தொடங்குவதற்காக ; வனத்தை நண்ணுவேன் -கானகத்தை அடையப் போகிறேன் ; நும் கருத்து யாது - உங்கள் எண்ணம் யாது ; என - என்று ; இனைய கூறினான் - இத் தன்மையானவற்றைத் தெரிவித்தான். பேதைமை - அறியாமை ; அவிச்சை, அறியாமை நிறைந்தது மனிதப் பிறப்பு என்பதனைத் திருவள்ளுவரும் “பிறப்பென்னும் பேதைமை” (358) என்று புலப்படுத்தியுள்ளார்.தொடங்குவான் - ‘வான்’ ஈற்று எதிர்கால வினையெச்சம். இனைய - குறிப்பு வினையாலணையும்பெயர். இராமனுக்கு இளவரசுப் பட்டம் கட்டத் தயரதன் எண்ணியதாகவே முதல்நூல் கூறுகிறது. இங்கோஅரசுரிமை ஏற்றலே பேசப்படுகிறது. 30 மந்திரக் கிழவரின் மன நிலை கலிநிலைத்துறை 1344. | திரண்ட தோளினன் இப்படிச் செப்பலும், சிந்தை புரண்டு மீதிடப் பொங்கிய உவகையர், ஆங்கே வெருண்டு, மன்னவன் பிரிவு எனும் விம்முறு நிலையால், இரண்டு கன்றினுக்கு இரங்கும் ஓர் ஆ என இருந்தார். |
திரண்ட தோளினன் - பருத்த தோள்களை உடைய தயரத மன்னன்; இப்படிச் செப்பலும் - இவ்வாறு கூறவும் ; சிந்தை புரண்டு மீதிடப் பொங்கிய உவகையர் - (மந்திரக் கிழவர்) மனத்தினின்று பொங்கி மேலிட வழிந்த மகிழ்ச்சியைஉடையவர்களாய் ; ஆங்கே - அதே நேரத்தில் ; மன்னவன் பிரிவு எனும்- தயரதன் பிரிவு என்கிற ; விம்முறு நிலையால் வெருண்டு - இரங்குதற்குரியநிலைமையால் |