எண்ணமும் - அங்குக் கூடியிருந்த அமைச்சர்களின் கருத்தையும் ; மகன்பால் பரிந்த சிந்தை - மகன்மீது அன்புகொண்ட ; அம் மன்னவன் கருதிய பயனும் - அந்தத் தயரதன் நினைத்த நினைப்பையும் ; மன் உயிர்க்குப்பொருந்தும் உறுதியும் - அவற்றால் நிலைபெற்ற உயிர்களுக்கு உண்டாகும் நன்மையையும் ; பொது உற நோக்கி - நடுவு நிலைமை பொருந்த ஆராய்ந்து ; செப்பும் -பின்வருமாறு சொல்வபவனானான். பொதுவுற நோக்கல் - விருப்பு வெறுப்பின்றிச் சீர்தூக்கல். வசிட்டன் பிரமதேவனுக்கு மானச புத்திரனாதலின் அவனைத் ‘திசைமுகன் மகன்’ என்றார். 33 1347. | ‘நிருப ! நின் குல மன்னவர் நேமி பண்டு உருட்டிப் பெருமை எய்தினர் ; யாவரே இராமனைப்பெற்றார்? கருமமும் இது ; கற்று உணர்ந்தோய்க்கு இனிக் கடவ தருமமும் இது ; தக்கதே உரைத்தனை ; - தகவோய் ! |
‘நிருப - மன்னவனே! தகவோய் - தகுதியுடையோனே! பண்டு - முற்காலத்தில் ; நின் குல மன்னர் நேமி உருட்டி - உன்குலத்தில் தோன்றிய அரசர்கள் ஆணைச் சக்கரத்தைச் செலுத்தி ; பெருமை பெற்றனர்- பெருமை அடைந்தார்கள் ; யாவரே இராமனைப் பெற்றார்- அவர்களுள்இராமனைப் போன்ற மைந்தனைப் பெற்றவர் எவர்? (ஒருவரும் இலர்) ; கற்று உணர்ந்தோய்க்கு- கற்பதற்குரிய நூல்களைக் கற்று அவற்றின் பொருளை உணர்ந்த உனக்கு ; கருமமும்இது - இப்பொழுது செய்தற்குரியதும் இதுவே ; இனி கடவ தருமமும் இது - இனிச் செய்வதற்குரிய அறச்செயலும் இதுவே ; தக்கதே நினைந்தனை - தகுதியுடைய செயலையேபுரியக் கருதினாய்.’ மன்னன் ஆணையைச் சக்கரம் என்றல் மரபு. ‘யாவரே இராமனைப் பெற்றார்’என்பது இராமன் தனிச் சிறப்புகள் பல பெற்றவன் என்பதனைக் குறித்தது. கருமம் தன் நலம்குறித்துச் செய்வது ; தருமம் - யாவர்க்கும் பயன் தரும்படி செய்வது. 34 1348. | ‘புண்ணியம் தொடர் வேள்விகள் யாவையும் புரிந்த அண்ணலே! இனி, அருந் தவம் இயற்றவும அடுக்கும்; வண்ண மேகலை நிலமகள், மற்று, உனைப் பிரிந்து கண் இழந்திலள் எனச் செயும், நீ தந்த கழலோன். |
‘புண்ணியம் தொடர் - நற்பயன் தோன்றக் காரணமான; வேள்விகள் யாவையும் புரிந்த அண்ணலே - யாகங்கள் எல்லாவற்றையும் செய்த பெரியோனே ! இனி அரு தவம் இயற்றவும் அடுக்கும் - நீ இனிமேல் செய்தற்கு அரிய தவத்தைச் செய்தலும்தகும்; வண்ண மேகலை நிலமகள்- அழகிய மேகலை என்னும் அணியினைப் பூண்ட |