பக்கம் எண் :

22அயோத்தியா காண்டம்

எண்ணமும் - அங்குக் கூடியிருந்த அமைச்சர்களின் கருத்தையும் ;
மகன்பால் பரிந்த சிந்தை - மகன்மீது அன்புகொண்ட ; அம் மன்னவன்
கருதிய பயனும்
- அந்தத் தயரதன் நினைத்த நினைப்பையும் ;  மன்
உயிர்க்குப்பொருந்தும் உறுதியும்
- அவற்றால் நிலைபெற்ற உயிர்களுக்கு
உண்டாகும் நன்மையையும் ; பொது உற நோக்கி - நடுவு நிலைமை
பொருந்த ஆராய்ந்து ;  செப்பும் -பின்வருமாறு சொல்வபவனானான்.

     பொதுவுற நோக்கல் - விருப்பு வெறுப்பின்றிச் சீர்தூக்கல். வசிட்டன்
பிரமதேவனுக்கு மானச புத்திரனாதலின் அவனைத் ‘திசைமுகன் மகன்’
என்றார்.                                                     33

1347. ‘நிருப ! நின் குல மன்னவர் நேமி பண்டு உருட்டிப்
பெருமை எய்தினர் ; யாவரே இராமனைப்பெற்றார்?
கருமமும் இது ; கற்று உணர்ந்தோய்க்கு இனிக் கடவ
தருமமும் இது ; தக்கதே உரைத்தனை ; - தகவோய் !

     ‘நிருப - மன்னவனே!  தகவோய் - தகுதியுடையோனே! பண்டு -
முற்காலத்தில் ;  நின் குல மன்னர் நேமி உருட்டி - உன்குலத்தில்
தோன்றிய அரசர்கள் ஆணைச் சக்கரத்தைச் செலுத்தி ;  பெருமை
பெற்றனர்
- பெருமை அடைந்தார்கள் ; யாவரே இராமனைப் பெற்றார்-
அவர்களுள்இராமனைப் போன்ற மைந்தனைப் பெற்றவர் எவர்? (ஒருவரும்
இலர்) ; கற்று உணர்ந்தோய்க்கு- கற்பதற்குரிய நூல்களைக் கற்று
அவற்றின் பொருளை உணர்ந்த உனக்கு ;  கருமமும்இது - இப்பொழுது
செய்தற்குரியதும் இதுவே ;  இனி கடவ தருமமும் இது - இனிச்
செய்வதற்குரிய அறச்செயலும் இதுவே ;  தக்கதே நினைந்தனை -
தகுதியுடைய செயலையேபுரியக் கருதினாய்.’

     மன்னன் ஆணையைச் சக்கரம் என்றல் மரபு. ‘யாவரே இராமனைப்
பெற்றார்’என்பது இராமன் தனிச் சிறப்புகள் பல பெற்றவன் என்பதனைக்
குறித்தது. கருமம் தன் நலம்குறித்துச் செய்வது ;  தருமம் - யாவர்க்கும்
பயன் தரும்படி செய்வது.                                       34

1348.‘புண்ணியம் தொடர் வேள்விகள் யாவையும் புரிந்த
அண்ணலே! இனி, அருந் தவம் இயற்றவும அடுக்கும்;
வண்ண மேகலை நிலமகள், மற்று, உனைப் பிரிந்து
கண் இழந்திலள் எனச் செயும், நீ தந்த கழலோன்.

    ‘புண்ணியம் தொடர் - நற்பயன் தோன்றக் காரணமான; வேள்விகள்
யாவையும் புரிந்த அண்ணலே
- யாகங்கள் எல்லாவற்றையும் செய்த
பெரியோனே ! இனி அரு தவம் இயற்றவும் அடுக்கும் - நீ இனிமேல்
செய்தற்கு அரிய தவத்தைச் செய்தலும்தகும்; வண்ண மேகலை நிலமகள்-
அழகிய மேகலை என்னும் அணியினைப் பூண்ட