| முனிவன் மா மலர்ப் பாதங்கள் முறைமையின் இறைஞ்சி, ‘இனிய சொல்லினை ; எம்பெருமான் அருள் அன்றோ, தனியன் நானிலம் தாங்கியது? அவற்கு இது தகாதோ? |
அனையது ஆகிய உவகையன் - அத்தன்மைத்தாகிய மகிழ்ச்சி யடைந்த தயரதன் ; கண்கள் நீர் அரும்ப - அம் மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாகக்கண்களில் நீர் துளிர்க்க ; முனிவன் மாமலர்ப் பாதங்கள் - வசிட்ட முனிவனுடையசிறந்த தாமரை மலர் போன்ற திருவடிகளை ; முறைமையின் இறைஞ்சி -வணங்குதற்குரிய முறைப்படி வணங்கி ; ‘இனிய சொல்லினை - செவிக்கும்சிந்தைக்கும் இனிய கருத்தினைத் தெரிவித்தாய் ; தனியன் நானிலம் தாங்கியது - தனியொருவனாக யான் மண்ணுலகினைப் போற்றிக் காத்தது; எம்பெருமான் அருள்அன்றோ - என் இறைவனாகிய நினது அருளால் அல்லவா? அவற்கு இது தகாதோ- அந்தஇராமனுக்கு இவ்வாறு அரசுபுரிதல் தகுதியுடையதாகாதோ? (ஆகும்).’ 42 1356. | ‘எந்தை ! நீ உவந்து இதம் சொல, எம் குலத்து அரசர், அந்தம் இல் அரும் பெரும் புகழ் அவனியில் நிறுவி, முந்து வேள்வியும் முடித்து, தம் இரு வினை முடித்தார் ; வந்தது, அவ் அருள் எனக்கும்’ என்று உரைசெய்து மகிழ்ந்தான். |
‘எந்தை - என் தந்தை போன்றவனே ; நீ உவந்து இதம்சொல - நீ விரும்பி நன்மையானவற்றை எடுத்துக் கூற ; எம் குலத்து அரசர் - எம்முடைய சூரிய குலத்தில் தோன்றிய மன்னர்கள் ; அந்தம் இல் அரும் பெரும் புகழ்- அழிவு இல்லாத அரியதும் மிக்கதுமாகிய புகழினை ; அவனியில் நிறுவி -உலகில் நிலைபெறச் செய்து ; முந்து வேள்வியும் முடித்து - சிறந்த யாகங்களையும்நிறைவேற்றி ; தம் இருவினை முடித்தார் - தம் நல்வினை தீவினையாகிய இருவினைகளையும் வென்றார்; அவ் அருள் எனக்கும் வந்தது - அந்த அருட்பேறு எனக்கும் கிடைத்தது ;’ என்று உரை செய்து மகிழ்ந்தான் - என்று சொல்லி இன்புற்றான். 43 |