பக்கம் எண் :

318அயோத்தியா காண்டம்

  அரும்பு அனைய கொங்கை, அயில்
அம்பு அனைய உண் கண்,
கரும்பு அனைய செங்சொல் நவில்,
கண்ணியர் துயின்றார்.

     பெரும் பகல் வருந்தினர் - பெரிய பகற் பொழுதில் வழிநடந்து
மிகவும் வருந்திய;தெங்கின் குரும்பைகள் பொரும் - தென்னங்
குரும்பைகளைத் தோல்வியுறச் செய்யும்;  பிறங்கு முலை - விளங்கிய
முலைகளை உடைய; செவிலி மங்கையர் குறங்கில் - தம்மைவளர்க்கும்
தாயரது துடையில்; அரும்பு அனைய கொங்கை - தாமரைமலர் அரும்பை
ஒத்தமுலையையும்; அயில் அம்பு அனைய உண்கள் - கூரிய அம்பை
ஒத்த மை உண்ட கண்ணையும் உடைய;  கரும்பு அனைய செஞ்சொல்
நவில் -
கரும்பைப் போலும் இன்ப செவ்வியசொற்களைப் பேசுகின்ற;
கன்னியர் - இள மகளிர்;  துயின்றார் - தூங்கினர்.

     செவில் மங்கையர் வயதின் மிக்கோர் என்பதைத் தென்னங் குரும்பை
போலும் முலை என்பதனால் அறிவுறுத்தி;  அவர் துடையில் துயிலும்
கன்னியர் இளவயதினர்  என்பதனை அரும்பைஒத்த முலை என்பதனாற்
கூறிய திறம் அறிந்து  மகிழத் தக்கது. அரும்பு - தாமரை அரும்பு ஆம்
‘பூவெனப்படுவது  பொறி வாழ் பூவே’  (நால்வர் நான்மணி.  40) 
என்பவாதலின் யாண்டும் இன்னமலர் என்னாது  மலர் என்றவழி
இடம்நோக்கித் தாமரையேசொல்லப்படும்.                           11

1851.பூ அகம் நிறைந்த புளினத் திரள்கள்தோறும்,
மா வகிரின் உண்கணர் மடப் பிடியின் வைக,
சேவகம் அமைந்த சிறு கண் கரிகள் என்ன,
தூ அகல் இல் குந்த மற மைந்தர்கள் துயின்றார்.

     அகம் பூ நிறைந்த புளினத் திரள்கள் தோறும் - தம்மிடத்தில்
மலர்கள்நிறைந்துள்ள மணல் மலைகளிடமெல்லாம்;  மா வகிரின்
உண்கணர் மடப்பிடியின் வைக -
பிளந்த மாவடுப் போன்ற மை உண்ட
கண்களை உடைய மகளிர் இளைய பெண் யானையைப் போலத்தூங்கித்
தங்க;  தூ அகல் இல் குந்த மறமைந்தர்கள் - தசை எப்போதும்
அகலாமல்இருக்கப்பெற்ற குந்தப் படையை உடைய வீரமறவ இளைஞர்கள்;
சேவகம் அமைந்த சிறுகண் கரிகள்என்ன - பிடியைப் பாதுகாப்புச்
செய்யும் தொழில் புரிகின்ற சிறிய கண்ணை  உடைய களிற்றியானைகள்
போல; துயின்றார் - துங்கினார்கள்.

     தூ - என்பது தசை.  ஊன்தங்கிய குந்தம். சேவகம் - வீரச் செயல்.
‘யானைகட்கும்  கூடம்’என்றும் ஆம். சேவகம் - உறக்கம் என்பதும்  ஒர்
உரை “யானை சேவகம் அமைந்தது  (7280)“தறிபொரு களிநல்யாதனை
சேவகம் கள்ளி”  (8837) என்பன காண்க.  இனிச்  சேவகம்  என்பது 
பாதுகாவல்;