| அரும்பு அனைய கொங்கை, அயில் அம்பு அனைய உண் கண், கரும்பு அனைய செங்சொல் நவில், கண்ணியர் துயின்றார். |
பெரும் பகல் வருந்தினர் - பெரிய பகற் பொழுதில் வழிநடந்து மிகவும் வருந்திய;தெங்கின் குரும்பைகள் பொரும் - தென்னங் குரும்பைகளைத் தோல்வியுறச் செய்யும்; பிறங்கு முலை - விளங்கிய முலைகளை உடைய; செவிலி மங்கையர் குறங்கில் - தம்மைவளர்க்கும் தாயரது துடையில்; அரும்பு அனைய கொங்கை - தாமரைமலர் அரும்பை ஒத்தமுலையையும்; அயில் அம்பு அனைய உண்கள் - கூரிய அம்பை ஒத்த மை உண்ட கண்ணையும் உடைய; கரும்பு அனைய செஞ்சொல் நவில் - கரும்பைப் போலும் இன்ப செவ்வியசொற்களைப் பேசுகின்ற; கன்னியர் - இள மகளிர்; துயின்றார் - தூங்கினர். செவில் மங்கையர் வயதின் மிக்கோர் என்பதைத் தென்னங் குரும்பை போலும் முலை என்பதனால் அறிவுறுத்தி; அவர் துடையில் துயிலும் கன்னியர் இளவயதினர் என்பதனை அரும்பைஒத்த முலை என்பதனாற் கூறிய திறம் அறிந்து மகிழத் தக்கது. அரும்பு - தாமரை அரும்பு ஆம் ‘பூவெனப்படுவது பொறி வாழ் பூவே’ (நால்வர் நான்மணி. 40) என்பவாதலின் யாண்டும் இன்னமலர் என்னாது மலர் என்றவழி இடம்நோக்கித் தாமரையேசொல்லப்படும். 11 1851. | பூ அகம் நிறைந்த புளினத் திரள்கள்தோறும், மா வகிரின் உண்கணர் மடப் பிடியின் வைக, சேவகம் அமைந்த சிறு கண் கரிகள் என்ன, தூ அகல் இல் குந்த மற மைந்தர்கள் துயின்றார். |
அகம் பூ நிறைந்த புளினத் திரள்கள் தோறும் - தம்மிடத்தில் மலர்கள்நிறைந்துள்ள மணல் மலைகளிடமெல்லாம்; மா வகிரின் உண்கணர் மடப்பிடியின் வைக -பிளந்த மாவடுப் போன்ற மை உண்ட கண்களை உடைய மகளிர் இளைய பெண் யானையைப் போலத்தூங்கித் தங்க; தூ அகல் இல் குந்த மறமைந்தர்கள் - தசை எப்போதும் அகலாமல்இருக்கப்பெற்ற குந்தப் படையை உடைய வீரமறவ இளைஞர்கள்; சேவகம் அமைந்த சிறுகண் கரிகள்என்ன - பிடியைப் பாதுகாப்புச் செய்யும் தொழில் புரிகின்ற சிறிய கண்ணை உடைய களிற்றியானைகள் போல; துயின்றார் - துங்கினார்கள். தூ - என்பது தசை. ஊன்தங்கிய குந்தம். சேவகம் - வீரச் செயல். ‘யானைகட்கும் கூடம்’என்றும் ஆம். சேவகம் - உறக்கம் என்பதும் ஒர் உரை “யானை சேவகம் அமைந்தது (7280)“தறிபொரு களிநல்யாதனை சேவகம் கள்ளி” (8837) என்பன காண்க. இனிச் சேவகம் என்பது பாதுகாவல்; |