பக்கம் எண் :

32அயோத்தியா காண்டம்

தேரில் சென்ற இராமனைக் கண்ட பெண்டிர் செயல்  

1364.முறையின் மொய்ம் முகில் என
     முரசு ஆர்த்திட, மடவார்
இறை கழன்ற சங்கு ஆர்த்திட,
     இமையவர், ‘எங்கள்
குறை முடிந்தது’ என்று ஆர்த்திட,
     குஞ்சியைச் சூழ்ந்த
நறை அலங்கல் வண்டு ஆர்த்திட,
     தேர்மிசை நடந்தான்.

     முரசு - பேரிகைகள் ;  முறையின் - வரிசையாக ; மொய்ம்முகில்
என ஆர்த்திட
- ஒன்றுசேர்ந்த மேகம் போல முழங்கவும் ;  மடவார்
இறை கழன்ற சங்கு ஆர்த்திட
- மடப்பம் பொருந்திய பெண்களினுடைய
முன்னங்கையினின்று கழன்று விழுந்த சங்கு வளையல்கள் ஒலிக்கவும் ;
இமையவர் -தேவர்கள் ;  எங்கள் குறை முடிந்தது என்று ஆர்த்திட-
எங்கள் வருத்தம்தீர்ந்தது என்று ஆரவாரிக்கவும் ;  குஞ்சியைச் சூழ்ந்த-
தன் திருமுடியில்சுற்றியிருந்த; நறை அலங்கல் வண்டு - தேன் சொரியும்
கண்ணிகளில் மொய்த்தவண்டுகள் ; ஆர்த்திட - ஒலிக்கவும் ; தேர்மிசை
நடந்தான்
-தேரில் சென்றான்.

     இறை - முன்கை ;  சங்கு - வளை; சங்கினால் செய்யப்பட்டமையின்
இப் பெயர் பெற்றது. மடவார் என்பது மடப்பம் பொருந்திய பெண்களைக்
குறித்தது.                                                    51

1365.பணை நிரந்தன ; 
     பாட்டு ஒலி நிரந்தன ; அனங்கன்
சுணை நிரந்தன ; 
     நாண் ஒலி கறங்கின ; நிறைப்பேர்
அணை நிரந்தன,
     அறிவு எனும் பெரும் புனல் ; அனையார்,
பிணை நிரந்தெனப்
     பரந்தனர் ; நாணமும் பிரிந்தார்.

     பணை நிரந்தன - (இராமன் தெருவில் புக) வாத்தியங்களின் ஒலிகள்
நிரம்பின ;  பாட்டு ஒலி நிரந்தன - பாடல்களின் ஓசைகள் நிறைந்தன ;
அனங்கன் கணை நிரந்தன - மன்மதனின் மலரம்புகள் நிரம்பின ; நாண்
ஒலிகறங்கின
- வில் நாணின் ஒலிகள் ஒலித்தன; அறிவு எனும் பெரும்
புனல்
-இராமனைப் பற்றிய எண்ணம் என்னும் மிக்க வெள்ளம் ; நிறை
பேர் அணை நிரந்தன
- மனஅடக்கம் என்னும் பெரிய அணையைக்
கடந்தன ; அனையார் - அவ்வாறானமகளிர்கள் ; நாணமும் பிரிந்தார்-
நாணத்தையும் விட்டவர்களாய் ;  பிணை நிரந்து