| முகமும் அவர் அருளும் நுகர்கிலர்கள், துயர் முடுக, அகவும் இள மயில்கள், உயிர் அலசியன அனையார், மகவு முலை வருட, இள மகளிர்கள் துயின்றார். |
இள மகளிர்கள் - இளைய பெண்கள்; தகவும் - நற்குணமும்; மிகு தவமும்- சிறந்த தவமும் (கொண்டானைத் தெய்வம் எனக் கொள்ளுதலும் அவன் குறிப்பின் வழிஒழுகலும்); இவை தழுவ - இவை பொருந்தி இருப்ப; உயர் கொழுநர் முகமும் அவர்அருளும் - உயர்ந்த கணவரது முகத்தையும் அவர் கருணையையும்; நுகர்கிலர்கள்-அனுபவியாதவர்களாய்; துயர் முடுக - துன்பம் விரைந்து செலுத்த; அகவும் இளமயில்கள் - ஆடுகின்ற இள மயில்கள்; உயிர் அலசியன அனையார் - உயிர் ஒடுங்கிப் போன தன்மையை ஒத்து; மகவு முலை வருட - குழந்தை முலையை நெருடிக்கொண்டிருக்க; துயின்றார் - தூங்கினார்கள். பால் உண்ண முலையில் பால் இல்லாமையால் குழந்தை முலை வருடுகிறது எனினும் அமையும். உண்டபின்னும், உண்ணும் போதும் குழந்தை முலை வருடல் இயல்பு. 15 1855. | குங்கும மலைக் குளிர் பனிக் குழுமி என்னத் துங்க முலையில் துகள் உறச் சிலர் துயின்றார்; அங்கை அணையில், பொலிவு அழுங்க, முகம் எல்லாம் பங்கயம் முகிழ்த்தன எனச் சிலர் படிந்தார். |
சிலர் -; குங்கும மலைக் குளிர் பனிக் குழுமி என்ன - குங்கும மலையிலேகுளிர்ந்த பனி திரண்டது போல; துங்க முலையில் - தூய தனங்களில்; துகள் உற -மணற்பொடி பரவ; துயின்றார் - தூங்கினர் ; சிலர்-; அங்கை அணையில் -தமது அழகிய கையாகிற அணையிலே; முகம் எல்லாம் - தங்கள் முகம் எல்லாம்; பொலிவுஅழுங்க - ஒளி மலர்ச்சி வாட; பங்கயம் முகிழ்த்தன என - தாமரை மலர்கள் குவிந்துள்ளன என்று கருதும்படி ; படிந்தார் - கிடந்து தூங்கினார்கள். |