பக்கம் எண் :

தைலம் ஆட்டு படலம் 321

     சிவந்த நகில்கள் வெண்மணல் துகள் பரவியிருப்பது  குங்கும
மலையில் பனி குழுமியது போலும்என்றார்.  பெரும்பாலும் ஆடவரினும்
மகளிரே. அதிகம் துன்பத்தில் துவளுவர் ஆதலின் அவர்களது
துயரத்தையே மிகுதியாக இங்குக் காட்டினார்.                        16

இராமன் சுமந்திரனைத் தேருடன் ஊர் திரும்பக் கூறல்  

1856. ஏனையரும் இன்னணம்
     உறங்கினர்; உறங்கா
மானவனும், மந்திரி
     சுமந்திரனை, ‘வா’ என்று,
‘ஊனம் இல் பெருங் குணம்
     ஒருங்கு உடைய உன்னால்
மேல் நிகழ்வது உண்டு; அவ் உரை
     கேள்’ என விளம்பும்;

     ஏனையரும் - மற்றவர்களும்; இன்னணம் - இவ்வாறு; உறங்கினர்-
துயின்றார்கள்; உறங்கா மானவனும் - தூங்காத பெருமை உடைய
இராமனும்;  மந்திரிசுமந்திரனை - அமைச்சனாகிய சுமந்திரனை;  ‘வா’
என்று -
வருக என அழைத்து;  ’ஊனம் இல் பெருங்குணம் ஒருங்கு
உடைய உன்னால் -
குற்றம் அற்ற பெரிய நற்பண்புகள் ஒருசேரப்
பெற்றுள்ள உன்னால்; மேல் நிகழ்வது  உண்டு - இனிச் செய்ய
இருப்பதாகிய செயல்உள்ளது;  அவ் உரை கேள்’ - அந்தச் சொற்களைக்
கேட்பாயாக;  என விளம்பும் -என்று சொல்லுவான்.

     தேர் ஓட்டுபவனாகவும் தசரதனுக்கு முதல் அமைச்சனாகவும் 
உள்ளவன் இச் சுமந்திரன்.சுமந்திரன் என்பது மந்திரத் தலைமையில்
உள்ளார் அனைவரையும் பொதுவாகக் குறிக்கவும்வரும்.               17

அறுசீர் விருத்தம்  

1857.‘பூண்ட பேர் அன்பினாரைப்
     போக்குவது அரிது; போக்காது,
ஈண்டுநின்று ஏகல் பொல்லாது;
     எந்தை! நீ இரதம் இன்னே
தூண்டினை மீள்வது ஆக்கின், சுவட்டை
     ஒர்ந்து, என்னை, ” அங்கே
மீண்டனன்’ என்ன மீள்வர்; இது
     நின்னை வேண்டிற்று’ என்றான்.