பக்கம் எண் :

322அயோத்தியா காண்டம்

பூண்ட பேர் அன்பினாரை -(நம்மிடத்தில்) பேரன்புடைய இவர்களை;
போக்குவது அரிது - நம்மை விட்டுப்பிரித்துப் போகச் செய்வது இயலாது;
போக்காது - இவர்களை அனுப்பாமல்; ஈண்டுநின்றுஏகல் - இங்கிருந்து
மேலும் வனத்திற்குள் செல்வது; பொல்லாது - நல்லதன்று (தீங்கு
தரும்ஆகையால்); ‘எந்தை! - என் தந்தை போன்ற சுமந்திரனே  நீ -;
இன்னே -இப்பொழுதே; இரதம் தூண்டினை- தேரைச் செலுத்தினையாகி
மீள்வது ஆக்கின் -திரும்பிப்போவதைச் செய்தால்; சுவட்டை ஓர்ந்து -
தேர்ச்சுவட்டை ஆராய்ந்து; என்னை ‘அங்கே மீண்டனன்’ என்ன -
என்னை அங்கே அயோத்திக்குத் திரும்பியவனாகக்கருதி;  மீள்வர் -
திரும்பிச் செல்வர்; இது-; நின்னை - உன்னை; வேண்டிற்று’- வேண்டிக்
கேட்டுக்கொள்கிற செயலாகும்; என்றான் -,

     நகர மாந்தர் அனைவரும் வனவாசம் செய்தல் ஆனது, ஆதலின்
சுமந்திரன் தேரைத் திருப்பிஊர் சென்றால், தேர்ச்சுவடு அயோத்தி போவது
கண்டு இராமன் திரும்பி ஊர் சென்றுவிட்டான்எனக் கருதி நகர மாந்தரும்
அயோத்திக்கு திரும்புவராதலின் அதனைச் செய்க என்று வேண்டினன்.  18

சுமந்திரன் வருந்தல்  

1858.செவ்விய குரிசில் கூற,
     தேல் வலான் செப்புவான், ‘அவ்
வெவ்விய தாயின், தீய
     விதியினின் மேலன் போலாம்;
இவ் வயின் நின்னை நீக்கி,
     இன் உயிர் தீர்ந்து இன்று ஏகி,
அவ் வயின் அனைய காண்டற்கு
     அமைதலால் அளியன்’ என்றான்.

     செவ்விய குரிசில் கூற - செம்மை வாய்ந்த இராமன் இவ்வாறு
சொல்ல; தேர்வலான் - தேர் செலுத்துதலில் வல்லவனாகிய சுமந்திரன்;
செப்புவான் -சொல்வான்; ‘இவ்வயின் நின்னை நீக்கி - இந்த இடத்தில்
உன்னைக் கைவிட்டு; இன் உயிர் தீர்ந்து இன்று - இனிய உயிர் நீங்க
இன்றைக்கே; ஏகி - புறப்பட்டுச்சென்று; அவ்வயின் - அந்த
அயேத்தியிலும்; அனைய - அதுபோலவே உள்ளகாட்சிகளை (உயிற்ற
உடல்களை); காண்டற்கு - பார்ப்பதற்கு; அமைதலால் -மனம் பொருந்திச்
சேறலால்; அளியன் - இரங்கத் தக்கவனாகிய யான்; அவ்வெவ்விய
தாயின் -
அந்தக் கொடிய தாயாகிய கைகேயியைக் காட்டிலும்; தீய
விதியினின்-
கொடிய விதியைக் காட்டிலும்; மேலன் போல் ஆம் -
மேம்பட்டவன்ஆவேன்போலும்;’ என்றான் -,