1861. | ‘வன் புலக் கல் மன மதி இல் வஞ்சனேன், என்பு உலப்புற உடைந்து இரங்கும் மன்னன்பால், உன் புலக்கு உரிய சொல் உணர்த்தச் செல்கெனோ? தென்புலக் கோமகன் தூதின் செல்கெனோ? |
‘வன் புலக் கல் மன மதி இல் வஞ்சனேன்- வலிய புலன்களையும் கல்போன்றமனத்தையும் உடைய அறிவற்ற வஞ்சகனாகிய யான்; என்பு உலப்புற உடைந்து இரங்கும்மன்னன்பால் - உடம்பு அழியும் படி மனம் முறிந்து வருந்தும் தசரதனிடத்து; உன் புலக்குஉரிய சொல்களை உணர்த்தச் செல்கெனோ? - உனது அறிவு வாய்ந்த சீரிய வார்த்தைகளைஉணர்த்தப் போகின்றேனோ (அல்லது) ; தென்புலக் கோமகன் தூதின் செல்கெனோ? - ! இயமனது தூதுவன்போலச் செல்லக் கடவேனோ’ செய்தி சொல்லு முன்னரே தசரதன் இறந்துபடுவான் ஆதலின், ‘இயம தூதன்போலச் செல்வேனோ’என்றான். 22 1862. | ‘ “நால் திசை மாந்தரும், நகர மாக்களும், தேற்றினர் கொணர்வர் என் சிறுவன் தன்னை” என்று ஆற்றின அரசனை, ஐய! வெய்ய என் கூற்று உறழ் சொல்லினால், கொலை செய்வேன்கொலோ? |
‘ஐய! - இராமனே; ‘நால்திசை மாந்தரும் - நான்கு திசைகளிலும் உள்ளமனிதர்களும்; நகர மாக்களும் - நகர மக்களும்; ‘உன் சிறுவன் தன்னை -(தசரதனே!) உன் மகனை; தேற்றினர் கொணர்வர்’- அழைத்து வருவர்’ என்று -; ஆற்றின அரசனை - (உயிர் நீங்காதபடி) ஆறுதல் கூறிக் காத்த அரசனை; என் -என்னுடைய; கூற்று உறழ் சொல்லினால்- இயமனை ஒத்த கொடிய வார்த்தையால்; கொலை செய்வேன்கொலோ?! - உயிர் நீங்குமாறு செய்து விடுவேனோ.’ |