பக்கம் எண் :

தைலம் ஆட்டு படலம் 325

     அனைவரும் அரசனைத் தேற்றியிருப்ப நான் நீ காடு சென்ற செய்தி
கூறி அவனுயிரைஅழிக்கின்றவ னாய்விடுவேனோ  என அஞ்சுகிறான்.   23

1863.‘ “அங்கிமேல் வேள்வி செய்து
    அரிதின் பெற்ற நின்
சிங்க ஏறு அகன்றது” என்று
    உணர்த்தச் செல்கெனோ?
எங்கள் கோமகற்கு, இனி,
    என்னின், கேகயன்
நங்கையே கடைமுறை
    நல்லள் போலுமால்!’

     ‘அங்கிமேல் வேள்வி  செய்து - நெருப்பின்கண் அசுவமேதம்,
புத்திர காமேட்டிமுதலிய யாகங்களைச் செய்து;  அரிதின் பெற்ற -
அருமையாகப் பெற்றெடுத்த;  உன்சிங்க ஏறு அகன்றது’ - உன்னுடைய
ஆண்சிங்கம் காடு சென்றுவிட்டது;  என்று  -;  உணர்த்த- சொல்ல;
செல்கெனோ? - செல்லக் கடவேனோ;  இனி-;  எங்கள் கோமகற்கு-
தசரதனுக்கு;  என்னின் - என்னைக்காட்டிலும்; கடைமுறை - இறுதியாகப்
பார்க்குமிடத்து; கேகயன் நங்கையே - கைகேயியே; நல்லள். போலும் -
நல்லவளாவாள் போலும்.

     என்னைவிடக் கைகேயி நல்லவள் என்றான்! கைகேயி வார்த்தை
கேட்டும் உயிரோடு இருந்ததசரதன் என்வார்த்தை கேட்டவுடனேயே
உயிரை விடுவான் என்று சுமந்திரன் வருந்தினன். ‘ஆல்’ஈற்றசை.       24

1864. முடிவுற, இன்னன மொழிந்த பின்னரும்,
அடி உறத் தழுவினன், அழுங்கு பேர் அரா
இடி உறத் துவளுவது என்னும் இன்னலன்;
படி உறப் புரண்டனன்;  பலவும் பன்னினான்.

     முடிவு உற - தன் கருத்து  (இராமனை மீள அழைத்துச் சேறலே
என்பது) முடிவாகத்தெரியும்படி; இன்னன - இந்த வார்த்தைகளை;
மொழிந்த பின்னரும் - சொல்லியபிறகும்; இடி உற - இடி ஒலி கேட்டு;
அழுங்கு பேர் அரா - மனம் வருந்தும்பெரும்பாம்பு;  துவளுவது -
துடித்துச் சோர்கின்றது;  என்னும் - என்றுசொல்லத்தக்க;  இன்னலன் -
துன்பம்  உடையவனாய்;  அடி உறத் தழுவினன் -இராமனது கால்களை
நன்கு பற்றிக்கொண்டு;  பலவும் பன்னினான் - பலவார்த்தைகளையும்
திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு;  படிமிசைப் புரண்டனன் -
பூமியில் விழுந்து புரண்டான்.