பக்கம் எண் :

மந்திரப் படலம் 33

என - பெண்மான்கள் நிரம்பினபோல ;  பரந்தனர் -தெருவில் வந்து
நிறைந்தார்கள்.

     பணை - வாத்தியங்கள் ;  முரசு என்பாரும் உளர் ;  பணை -
கருவியாற் பிறப்பதற்கும், பாட்டு - கண்டத்தாற் பிறப்பதற்கும் கொள்க.
நிரத்தல் -பரத்தல். அனங்கன் - உருவமில்லாதவன். அறிவைப் புனல்
என்றதற்கு ஏற்ப நிறையை அணைஎன்றார் ;  உருவகம். நாணமும்
என்றதில் உம்மை இறந்தது தழுவியது.                             52

1366.நீள் எழுத் தொடர் வாயிலில்,
     குழையொடு நெகிழ்ந்த
ஆளகத்தினோடு அரமியத்
     தலத்தினும் அலர்ந்த ; 
வாள் அரத்த வேல்
     வண்டொடு கெண்டைகள் மயங்க,
சாளரத்தினும் பூத்தன.
     தாமரை மலர்கள்.

     நீள் எழுத் தொடர் வாயிலில் - நீண்ட தூண்கள் அமைந்த
மாளிகைவாயில்களிலும் ; அரமியத் தலத்தினும் - அவற்றின் நிலா
முற்றங்களிலும் ;  குழையொடு - குண்டலங்களொடும் ;  நெகிழ்ந்த
ஆளகத்தினோடு
- அவிழ்ந்தகூந்தலொடும் ;  தாமரை மலர்கள் -
பெண்களின் முகங்களாகிய தாமரை மலர்கள் ; அலர்ந்தன - மலர்ந்தன ;
சாளரத்தினும் - அவை அம் மாளிகைகளின்பலகணிகளிலும் ;  வாள்
அரத்தம் வேல் வண்டொடு கெண்டைகள் மயங்க -
வாளொடும்குருதி
தோய்ந்த வேலொடும் வண்டுகளொடும் கெண்டைகள் கலந்து நிற்க ;
பூத்தன -மலர்ந்தன.

     வீதியில் வந்த பெண்களே யன்றி, வேறு சிலர் மாளிகை
வாயில்களிலும் நிலா முற்றங்களிலும் இருந்து இராமனைக் கண்டனர் என்பது
கருத்து. புருவம் வாளாகவும், செவ்வரிபடர்ந்த கண் குருதி படிந்த
வேலாகவும், கருவிழி வண்டாகவும், புடைபெயரும் கண்கள்
கெண்டையாகவும்கூறப்பட்டன. ஆளகம் - அளகம் என்பதன் நீட்டல்
விகாரம் ;  அளகம் - கூந்தல்.                                   53

1367.மண்டலம் தரு மதி கெழு,
     மழை முகில் அனைய,
அண்டர் நாயகன் வரை புரை
     அகலத்துள் அலங்கல்,
தொண்டை வாய்ச்சியர் நிறையொடும்,
     நாணொடும், தொடர்ந்த
கெண்டையும் உள ; கிளை பயில்
     வண்டொடும் கிடந்த.