பக்கம் எண் :

மந்திரப் படலம் 35

 தள்ளுறச் சுமந்து, எழுதரும்
     தமனியக் கொம்பில், -
புள்ளி நுண் பனி பொடிப்பன,
     பொன்னிடைப் பொதிந்த,
எள்ளுடைப் பொரி விரவின, -
     உள சில இளநீர்.

     வள் உறை கழித்து - (இராமனைக் கண்டவுடன்) வாரினால் இயன்ற
உறைகளை நீக்கி ; ஒளிர்வன வாள் - ஒளிவீசுகின்ற வாள்களோடு ; நிமிர்
மதியம் தள்ளுறச் சுமந்து - நிமிர்ந்த சந்திரனைத் தள்ளாடியவாறு சுமந்து
கொண்டு ;  எழுதரும் தமனியக் கொம்பில் - எழுகின்ற பொன்னாலாகிய
கொம்புகளில் ;  உளசிலஇளநீர் - உள்ளனவாகிய இரண்டு இளநீர்கள் ;
புள்ளி நுண்பனி பொடிப்பன -புள்ளிகளாகிய நுண்ணிய வியர்வை
தோன்றுவனவும் ;  பொன்னிடைப் பொதிந்த -இடையிடையே பொற்
பொடி கலந்தனவுமாய் ;  எள்ளுடைப் பொரி விரவின - தேமலாகிய
எள்ளின் பொரிகள் ஆங்காங்கு விரியப் பெற்றன.

     மகளிரின் இமைகளை உறைகளாகவும், கண்களை வாளாகவும், முகத்தை
மதியாகவும், அவர்களைக் கொம்பாகவும், வியர்வையைப் புள்ளிகளாகவும்,
தேமலைப் பொன்னாகவும்,பசலையை எட்பொரியாகவும், நகில்களை
இளநீராகவும் உருவகித்தார். சில - ஈண்டு இரண்டு என்னும்பொருளில்
வந்தது.                                                      56

இராமன் தயரதனைச் சந்தித்தல்  

1370.ஆயது, அவ்வழி நிகழ்தர, ஆடவர் எல்லாம்
தாயை முன்னிய கன்று என நின்று உயிர் தளிர்ப்ப,
தூய தம்பியும், தானும், அச் சுமந்திரன் தேர்மேல்
போய், அகம் குளிர் புரவலன் இருந்துழிப் புக்கான்.

     ஆயது அவ் வழி நிகழ்தர - அத்தகைய செயல் அவ்விடத்து
நடைபெற ; ஆடவர் எல்லாம் - இராமனைக் கண்ட ஆண்கள்
எல்லாரும் ;  தாயை முன்னிய கன்றுஎன நின்று - தாய்ப்பசுவை
நினைந்த கன்று போல நின்று ;  உயிர் தளிர்ப்ப- உயிர் மகிழ்ச்சியடைய;
தூய தம்பியும் தானும் - தூய்மை நிறைந்த தம்பியானஇலக்குவனும்
தானும் ;  அச் சுமந்திரன் தேர்மேல் போய் - அந்தச் சுமந்திரனது
தேரில் ஏறிச் சென்று ;  அகம் குளிர் புரவலன் இருந்துழி - மனம்
மகிழ்ந்திருக்கின்ற தயரதன் இருந்த மண்டபத்துள் ;  புக்கான் - புகுந்தான்.

     உள்ளத்தின் தளிர்ப்பு உயிரின் தளிர்ப்பாகக் கூறப்பட்டது. தம்பியும்
தானும் புக்கான் - சிறப்பினால் ஒருமை வினைக்கொண்டு முடிந்தது,
“வேயுயர் கானில் தானும்தம்பியும் மிதிலைப் பொன்னும் போயினன்
என்றான்” என்பது