பக்கம் எண் :

352அயோத்தியா காண்டம்

     வானோர் - தேவர்கள்;  கேள்விச் செல்வம் -  இராமன் புகழ்
கேட்டல்ஆகிய செல்வத்தை; துய்க்க - அனுபவிக்க;  வயிற்று ஓர்கிளை
தந்தாள் -
தன்வயிற்றிலிருந்து  ஒப்பற்ற புதல்வனைத் தந்தவளாகிய
கோசலை (தயரதனை நோக்கி);  ‘வேள்விச் செல்வம்  துய்த்தி கொல்? -
முன் செய்த வேள்களின் பயனை துய்த்திகொல் -அனுபவிக்சச் சென்றாயோ;
மெய்ம்மை - சத்தியம் என்கிற; துணை இன்மை -தனக்குச் சமானம்
இல்லாத; சூழ்வின் செல்வம் - ஒன்றை  உறுதி யாகப் பற்றிய உன்
ஆலோசனையின் பயனை;  துய்த்திகொல் - அனுபவிக்கச் சென்றாயோ;
தோலா -தோல்வி அடையாத; மனு நூலின் வாழ்வின் செல்வம் - மனு
முறைப்படி அரச வாழ்வுநடத்தியதால் ஆகிய பயனை; துய்த்திகொல்’-
அனுபவிக்கச் சென்றாயோ;  என்றனள் -

     கேள்வி - கேட்டற்குரிய புகழ். ‘தீங்கவி செவிகள்ஆரத் தேவரும்
பருகச் செய்தான்’ (32)என்ற  கருத்து  இங்கு நினையத் தக்கது.  கிளை -
உறவு கோசலைக்கு உறவாவது  புதல்வன் என்பதே. வேள்வி,  சத்தியம்,
செங்கோன்மை இவற்றைக் காத்தொழுகிய தசரதன் இவற்றின் பயனை
அனுபவிக்கச் சென்றானோ என்றாள். ‘கொல்’ ஐயவினா. ‘மன்’
கழிவுப்பொருள்;  அவன் இப்போது இல்லாமையின் கழிந்தது  கழிந்தது
என்னும் பொருளில் வந்தது.இடைச்சொல்.                          68

தேவிமார் அனைவரும் வந்து புலம்புதல்  

அறுசீர் விருத்தம்

1908.ஆழி வேந்தன் பெருந்தேவி
     அன்ன பன்னி அழுது அரற்ற,
தோழி அன்ன சுமித்திரையும்
     துளங்கி ஏங்கி உயிர் சோர,
ஊழி திரிவது எனக் கோயில்
     உலையும் வேலை, மற்று ஒழிந்த
மாழை உண்கன் தேவியரும்,
     மயிலின் குழாத்தின் வந்து இரைத்தார்.

     ஆழிவேந்தன் பெருந்தேவி அன்ன பன்னி அழுது அரற்ற -
சக்கரவர்த்தியின் மூத்தபட்டத்தரசியாகிய கோசலை அப்படிப்பட்ட
வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி அழுதுபுலம்ப; தோழி
அன்ன சுமித்திரையும் துளங்கி ஏங்கி உயிர்சோர -
அவளுடைய
உயிர்த்தோழியாகிய சுமித்ரையாகிய இளைய பட்டத்தரசியும் நிலைகுலைந்து
புலம்பி உயிர் தளர;ஊழி  திரிவது என -  பிரளய காலத்தில் உலகம்
கழல்வது  போல;  கோயில் உலையும்வேலை - அரண்மனை
நிலைதடுமாறுடம் போது ; மற்று  -;  ஒழிந்த மாழை உண்கண்
தேவியரும்-
மிகுந்துள்ள அறியாமை கொண்ட மை  உண்ட
கண்ணையுடைய அறுபதினாயிரம் தேவிமார்களும்; மயிலின் குழாத்தின்-