மயிற் கூட்டம் போல; வந்து -; இரைத்தார் - கூச்சலிட்டுப் புலம்பினர். மற்று - பிறிது என்னும் பொருளில் வந்த இடைச்சொல். 69 1909. | துஞ்சினானை, தம் உயிரின் துணையைக் கண்டார்; துணுக்கத்தால் நஞ்சு நுகர்ந்தார் என உடலம் நடுங்காநின்றார்; என்றாலும், அஞ்சி அழுங்கி விழுந்திலரால்;- அன்பின் தறுகண் பிறிது உண்டோ? - வஞ்சம் இல்லா மனத்தானை வானில் தொடர்வான் மனம் வலித்தார். |
(அத்தேவியர்) துஞ்சினானை - இறந்தவனை; தம் உயிரின் துணையை - தம்உயிர்க்குத் துணையாக இருந்த நாயகனை; கண்டார் - பார்த்தார்கள்; துணுக்கத்தால்- வெருவுதலால்; நஞ்சு நுகர்ந்தார் என - விடம் உண்டவர் போல; உடலம்நடுங்காநின்றார் - உடல் நடுக்க மெடுக்க இருந்தார்கள்; என்றாலும் -இப்படிப்பட்ட துக்கம் வந்த போதிலும்; அஞ்சி அழுங்கி விழுந்திலர் - பயந்து மனம் துயரம் மிக்கு விழவில்லை; வஞ்சம் இல்லா மனத்தாளை- வஞ்சனையற்ற மனம் உடைய தசரதனை; வானில் தொடர்வான் மனம் வலித்தார் - இறந்து பின்பற்றிச் சென்றுவானுலகில் அடைய மனத்தின்கண் உறுதி மேற்கொண்டார்; அன்பின் தறுகண் பிறிது உண்டோ? -அன்பைக் காட்டிலும் வலியது வேறு உண்டோ? (இல்லை என்றபடி). வானுலகில் தயரனை அடைய உறுதி பூண்டபடியால் இங்கே மனம் சோர்ந்து போகவில்லையேதவிரத் துக்கம் இல்லை என்பது பொருள் இல்லை - இறக்கத் துணிந்தனர் என்பதாம். ‘ஆல்’அசை. 70 1910. | அனம் கொள் அளக்கர் இரும் பரப்பில், அண்டர் உலகில், அப்புறத்தில் விளங்கும் மாதர், ‘கற்பினார், இவரின் யாரோ!’ என, நின்றார்; களங்கம் நீத்த மதி முகத்தார்; கான வெள்ளம் கால் கோப்ப, துளங்கல் இல்லாத் தனிக்குன்றில் தொக்க மயிலின் சூழ்ந்து இருந்தார். |
அளம் கொள் அளக்கர் இரும்பரப்பில் - உப்பளத்தைக் கொண்ட கடலாற்சூழப்பெற்ற நிலவுலகில்; அண்டர் உலகில் - |