பக்கம் எண் :

தைலம் ஆட்டு படலம் 353

மயிற் கூட்டம் போல; வந்து -;  இரைத்தார் - கூச்சலிட்டுப் புலம்பினர்.

      மற்று - பிறிது  என்னும் பொருளில் வந்த இடைச்சொல்.        69

1909. துஞ்சினானை, தம் உயிரின் துணையைக்
     கண்டார்; துணுக்கத்தால்
நஞ்சு நுகர்ந்தார் என உடலம்
     நடுங்காநின்றார்; என்றாலும்,
அஞ்சி அழுங்கி விழுந்திலரால்;-
     அன்பின் தறுகண் பிறிது உண்டோ? -
வஞ்சம் இல்லா மனத்தானை
     வானில் தொடர்வான் மனம் வலித்தார்.

     (அத்தேவியர்) துஞ்சினானை - இறந்தவனை; தம் உயிரின்
துணையை
- தம்உயிர்க்குத் துணையாக இருந்த நாயகனை;  கண்டார் -
பார்த்தார்கள்; துணுக்கத்தால்- வெருவுதலால்; நஞ்சு நுகர்ந்தார் என -
விடம் உண்டவர் போல; உடலம்நடுங்காநின்றார் - உடல் நடுக்க
மெடுக்க இருந்தார்கள்;  என்றாலும் -இப்படிப்பட்ட  துக்கம்  வந்த
போதிலும்; அஞ்சி அழுங்கி விழுந்திலர் - பயந்து மனம் துயரம் மிக்கு
விழவில்லை; வஞ்சம் இல்லா மனத்தாளை- வஞ்சனையற்ற மனம் உடைய
தசரதனை; வானில் தொடர்வான் மனம் வலித்தார் - இறந்து பின்பற்றிச்
சென்றுவானுலகில் அடைய மனத்தின்கண் உறுதி மேற்கொண்டார்;
அன்பின் தறுகண் பிறிது உண்டோ? -அன்பைக் காட்டிலும் வலியது
வேறு உண்டோ? (இல்லை என்றபடி).

     வானுலகில் தயரனை அடைய உறுதி பூண்டபடியால் இங்கே மனம்
சோர்ந்து போகவில்லையேதவிரத் துக்கம் இல்லை  என்பது  பொருள்
இல்லை - இறக்கத் துணிந்தனர் என்பதாம். ‘ஆல்’அசை.              70

1910.அனம் கொள் அளக்கர் இரும் பரப்பில்,
     அண்டர் உலகில், அப்புறத்தில்
விளங்கும் மாதர், ‘கற்பினார்,
     இவரின் யாரோ!’ என, நின்றார்;
களங்கம் நீத்த மதி முகத்தார்;
     கான வெள்ளம் கால் கோப்ப,
துளங்கல் இல்லாத் தனிக்குன்றில்
     தொக்க மயிலின் சூழ்ந்து இருந்தார்.

     அளம் கொள் அளக்கர் இரும்பரப்பில் - உப்பளத்தைக் கொண்ட
கடலாற்சூழப்பெற்ற நிலவுலகில்; அண்டர் உலகில் -