போல (தைலமாட்டுப் படலம், 60). இருந்தஉழி - இருந்துழி புக்கான் - புகு என்னும் பகுதி இரட்டித்துக் காலம் காட்டிற்று. 57 தயரதன் இராமனைத் தழுவுதல் 1371. | மாதவன்தனை வரன்முறை வணங்கி, வாள் உழவன் பாத பங்கயம் பணிந்தனன் ; பணிதலும், அனையான், காதல் பொங்கிட, கண் பனி உகுத்திட, கனி வாய்ச் சீதை கொண்கனைத் திரு உறை மார்பகம் சேர்த்தான். |
வரன்முறை மாதவன்தனை வணங்கி - தொன்றுதொட்டுவரும் முறைப்படி பெரியதவமுனியாகிய வசிட்டனைத் தொழுது ; வான் உழவன் பாத பங்கயம் பணிந்தனன் -வாட்போரில் வல்லவனான தயரத மன்னன் திருவடியாகிய தாமரைகளை வணங்கினான் ; பணிதலும் - அவ்வாறு இராமன் வணங்கிய அளவில் ; அனையான் - அவ்வாறுவணங்கப்பெற்ற தயரதன் ; காதல் பொங்கிட - இராமன் மீது கொண்ட பாசம்மேலிட ; கண்பனி உகுத்திட - கண்கள் இன்பக் கண்ணீரைச் சொரிந்திட ; கனிவாய்ச் சீதை கொண்கனை - கனிபோன்ற இதழ்களையுடைய சீதையின் கணவனாகியஇராமனை ; திருஉறை மார்பகம் சேர்த்தான் - திருத் தங்கிய தன் மார்போடுஅணைத்துக் கொண்டான். வாள் உழவர் - வாட்போரில் வல்லவர். வில்லேர் உழவர் என்று திருவள்ளுவர் வீரர்களைக் குறித்தல் கருதத்தக்கது (குறள். 872) திரு - அரசச் செல்வம். 58 1372. | ‘நலம் கொள் மைந்தனைத் தழுவினன்’ என்பது என்? நளி நீர் நிலங்கள் தாங்குறு நிலையினை நிலையிட நினைந்தான், விலங்கல் அன்ன திண் தோளையும், மெய்த் திரு இருக்கும் அலங்கல் மார்பையும், தனது தோள், மார்பு, கொண்டு அளந்தான். |
நலம்கொள் மைந்தனை - நன்மைகள் அனைத்தையும் கொண்ட தன்மகனாகிய இராமனை ; தழுவினன் என்பது என் - தந்தையாகிய தயரதன்அணைத்துக்கொண்டான் என்று சொல்வது எதன்பொருட்டு? ; |