பக்கம் எண் :

கங்கைப் படலம் 371

மூவரும் கங்கைக் கரை அடைய முனிவர்கள் காண வருதல்  

கலிவிருத்தம்

1934.பருதி பற்றிய பல் கலன் முற்றினர்,
மருத வைப்பின் வளம் கெழு நாடு ஒரீஇ.
சுருதி கற்று உயர் தோமிலர் சுற்றுறும்
விரி திரைப் புனல் கங்கையை மேவினார்.

     பருதி பற்றிய - சூரியனைப் போன்ற ஒளிபடைத்த; பல்கலன் - பல
அணிகலன்களை; முற்றினர் - நிறைய அணிந்துள்ள மூவரும்; மருத
வைப்பின் -
வயல்நிலங்களாகிய செல்வமுடைய;  வளம் கெழு நாடு
ஒரீஇ -
வளம் பொருந்திய நாடு கடந்து சென்று; சுருதி கற்று உயர் -
வேதங்களை (இடையறாது) கற்று உயர்ந்த; தோம் இலர்- குற்றம் இல்லாத
முனிவரர்; சுற்றுறும் - எப்பொழுதும் சுற்றி இருக்கப் பெற்ற; விரி
திரைப்புனல் கங்கையை -
விரிந்த அலைகளையுடைய நீர் நிரம்பிய
கங்கையாற்றை;  மேவினார் - அடைந்தார்.

     தாம் செய்ய வேண்டிய விரத நியமங்களைச் செய்துகொண்டு,
இணையாகத் தங்குதற்கு ஏற்றஇடம் ஆதலாலும்,  தன்னை அடைந்தாரது
பாவத்தைப் போக்குதலானும் முனிவரர் கங்கையைச் சுற்றித்தங்கித் தவம்
செய்வாராயினர்.                                                9

1935.கங்கை என்னும் கடவுள் திரு நதி
தங்கி வைகும் தபோதனர் யாவரும்,
‘எங்கள் செல் கதி வந்தது’ என்று ஏமுறா,
அம் கண் நாயகற் காண, வந்து அண்மினார்.

     கங்கை என்னும் கடவுள் திருநதி - கங்கை என்று சொல்லப்படும்
தெய்வத்தன்மைஉடைய அழகிய ஆற்றின் கரையில்;  தங்கி வைகும்
தபோதனர் யாவரும் -
தங்கிஇருக்கின்ற முனிவர்கள் எல்லாரும்; ‘எங்கள்
செல் கதி வந்தது’ என்று ஏமுறா -
எங்கள்மோட்ச மாகிய செல்லும்
பேறு எதிர்ப்பட்டது என்று மனத்தின்கண் இன்பம் அடைந்து; அம்கண்
நாயகன் காண-
அருளுடைய கண்களை உடைய இராமனைக் காண்பதற்கு;
வந்து அண்மினார் -வந்து அணுகினார்கள்.

     பரம்பொருளே இராமனாக அவதரித்துள்ளமை உணர்ந்தவர் ஆதலின்,
‘எங்கள் செல்கதி வந்தது’என்று முனிவரர் இன்புற்றனர் என்க. கண்ணுக்கு
அழகு,  அருளாதலின் ‘அம்’- அழகு எனப்பொருள்கொண்டது.         10

1936.பெண்ணின் நோக்கும் சுவையை, பிறர் பிறர்க்கு
எண்ணி நோக்கி இயம்ப அரும் இன்பத்தை,
பண்ணின் நோக்கும் பரா அமுதை, பசுங்
கண்ணின் நோக்கினர், உள்ளம் களிக்கின்றார்.