கொடி போன்ற நுண்ணிய இடையை உடைய தாமரையில் வீற்றிருக்கும் திருமகளுடன்; வெள்ளி வெண்நிறப் பாற்கடல் - வெள்ளி போன்ற வெண்மையான நிறத்தை உடைய பாற்கடலில் மேல்; மேலைநாள் - முன்னொரு காலத்தில்; பள்ளி நீங்கிய பான்மையில் - அனந்தசயனத்தில் அறிதுயில் ஒழிந்து எழுந்து நின்ற தன்மை போல; தோன்றினான் - தோற்றமளித்தான். கங்கை அலைகள் வெண்மையாய் உள்ளன. அதன்மேல் இராமனும் சீதையும் தோன்றுதல் திருப்பாற்கடலில் துயிலும் திருமால் திருமகளோடு எழுந்து நின்றாற் போலும்என்றார். 19 1945. | வஞ்சி நாண இடைக்கு, மட நடைக்கு அஞ்சி அன்னம் ஒதுங்க, அடி அன்ன கஞ்சம் நீரில் ஒளிப்ப, கயல் உக, பஞ்சி மெல் அடிப் பாவையும் ஆடினாள். |
பஞ்சின் மெல்லடிப் பாவையும்- செம் பஞ்சு போன்ற மென்மையான பாதங்களை உடையசீதையும்; இடைக்கு வஞ்சி நாண - தன்இடைக்கு வஞ்சிக் கொடி நாணப்பட்டுத்தோற்றொதுங்க; மடநடைக்கு அன்னம் அஞ்சி ஒதுங்க - அழகிய தன் நடைக்கு அன்னப் பறவைதோற்றுப் பயந்து பின்னிட; அடி அன்ன கங்சம் நீரில் ஒளிப்ப - தன் பாதம் போன்ற தாமரை தோற்றுத் தண்ணீரில் மறைந்துகொள்ள; கயல் உக - கயல் மீன்கள் (கண்ணுக்குத்தோற்றுக்) கெட; ஆடினாள் - நீராடினாள். வஞ்சி, அன்னம், தாமரை, கயல் ஆகியவை நீரில் உள்ளவை. நீராடும் சீதையின்உறுப்புநலன் கண்டு அவை தோற்றதாகக் கற்பனை செய்தார். கயல் என்பதனால் கண்ணுக்குத் தோற்றுஎன்பது வருவிக்கப் பெற்றது. 20 1946. | தேவதேவன் செறி சடைக் கற்றையுள் கோசை மாலை எருக்கொடு கொன்றையின் பூவும் நாறவள்; பூங்குழல் கற்றையின் நாவி நாள்மலர் கங்கையும் நாளினாள். |
கங்கையும் - கங்கா தேவியாகிய நதியும்; தேவ தேவன் - சிவ பிரானது; செறி சடைக் கற்றையுள் - செறிந்த சடைக் கற்றைக்குள்; (நெடுநாள் இருந்ததனால் உளதான) கோவை மாலை எருக்கொடு - எருக்கம் பூமாலைச் சரத்தோடு; கொன்றையின்பூவும் - கொன்றை மலர் மணமும்; நாறலள் - இப்பொழுது வீசப் பெறாதவனாய்; பூங்குழல் கற்றையின் - (சீதையின்) அழகமைந்த கூந்தல் தொகுதியில் உள்ள; நாவி- கத்தூரிப் புனுகு எண்ணெய் மணமும்; நாள்மலர் - அன்றலர்ந்த மலர்களின் மணமும்; நாளினள் - வீசப் பெற்றாள். |