பக்கம் எண் :

38அயோத்தியா காண்டம்

1374. ‘ஐய ! சாலவும் அலசினென் ; 
     அரும் பெரு மூப்பும்
மெய்யது ஆயது ; வியல் இடப்
     பெரும் பரம் விசித்த
தொய்யல் மா நிலச் சுமை உறு
     சிறை துறந்து, இனி யான்
உய்யல் ஆவது ஓர் நெறி புக,
     உதவிட வேண்டும்.

     ‘ஐய - ஐயனே !  சாலவும் அலசினென் - மிகவும்தளர்ந்தேன் ;
அரும் பெரு மூப்பும் மெய்யது ஆயது - தாங்குதற்கு அரியதும்
பெரியதுமான வயோதிகமும் என் உடம்பில் தோன்றிவிட்டது ;  வியல்
இடப் பெரும்பரந்த விசித்த -
அகன்ற இடத்தைக் காக்கும் பெரிய
பாரமானது கட்டப்பட்ட ;  தொய்யல் மா நிலச்சுமை - துன்பத்திற்குக்
காரணமாகிய பெரிய அரசாட்சியை நடத்தும்பொறுப்பாகிய ; உறு சிறை
துறந்து
- மிக்க சிறையை விட்டுவிட்டு ; இனி யான் உய்யல் ஆவது -
இனி நான் பிழைக்கலாவதாகிய ;  ஓர் நெறி புக -ஒப்பற்ற வழியில்
செல்ல ;  உதவிட வேண்டும் - உதவி செய்ய வேண்டும்.’

     தொய்யல் - துன்பம் ;  சோர்வும் ஆம். சுமை - பொறுப்பு ; ‘என்
தலையில் இவனைக் காக்கும் சுமை விழுந்தது’ என்னும் பேச்சுவழக்கில்
இதற்கு இப்பொருள் இருத்தலைக் காணலாம்.                      61

1375.‘ “உரிமை மைந்தரைப் பெறுகின்றது,
     உறு துயர் நீங்கி,
இருமையும் பெறற்கு” என்பது
     பெரியவர் இயற்கை ; 
தருமம் அன்ன நின்-தந்த யான்,
     தளர்வது தகவோ?
கருமம் என்வயின் செய்யின், என்
     கட்டுரை கோடி.

     ‘உரிமை மைந்தரைப் பெறுகின்றது - எல்லா உரிமைகளையும்
உடையபிள்ளையை ஒருவர் பெறுவது ;  உறு துயர் நீங்கி - மிக்க
துயரத்தினின்றும்விலகி ;  இருமையும் பெறற்கு என்பது - இம்மை
மறுமை இன்பங்களை அடைவதற்காகும்என்பது ;  பெரியவர் இயற்கை -
பெரியோரது இயல்பாக உள்ளது ;  தருமம்அன்ன நின் தந்த யான் -
அறமே போன்ற நின்னை மகனாகப் பெற்ற நான் ;  தளர்வது தகவோ -
மனத் தளர்ச்சியடைதல் தக்கதோ? (அன்று) ;  என்வயின் கருமம்
செய்யின்
- (ஆதலால்) என்மீது செய்தற்குரியது செய்ய