பக்கம் எண் :

382அயோத்தியா காண்டம்

1956.காழம் இட்ட குறங்கினன், கங்கையின்
ஆழம் இட்ட நெடுமையினான், அரை
தாழ விட்ட செந் தோலன், தயங்குறச்
சூழ விட்ட தொடு புலி வாலினான்.

     காழம் இட்ட குறங்கினன் - காழம் என்னும் ஒருவகை  உடையை
இறுக அணிந்த துடையைஉடையவன்; கங்கையின் ஆழம் இட்ட
நெடுமையினான் -
கங்கையின் ஆழத்தைக் கண்டறிந்தபெருமை
படைத்தவன்;  அரை தாழ விட்ட செந்தோலன் - இடுப்பிலிருந்து கீழே
தொங்கவிடப்பட்ட சிவந்த வார்ப்பட்டை  உடையவன்;  தயங்குற -
விளங்கும்படி;  சூழவிட்ட - இடுப்பைச் சுற்றிக் கட்டிய;  தொடு புலி
வாலினான் -
ஒன்றோடொன்றசேர்த்துக் கட்டப் பெற்ற புவி வாலை
உடையவன்.

     காழம் எனப்து இடுப்பிலிருந்து தொடைவரை அணியும் சிறிய
காற்சட்டை.  காழகம் எனவும்வரும. அரையிலிருந்து  தொங்கவிடப்பெற்ற
செந்திறத் தோலாகிய வார்ப் பட்டை அம்பு முதலியனதீட்டுதற்காம் என்க.
புலிவால்களை ஒன்றோடொன்று பிணைத்து இடுப்பைச் சுற்றிக்
கட்டியுள்ளான்.                                                 4

1957.பல் தொடுத்தன்ன பல் சூல் கவடியன்,
கல் தொடுத்தன்ன போலும் கழலினான்,
அல் தொடுத்தன்ன குஞ்சியன், ஆளியின்
நெற்றொடு ஒத்து நெரிந்த புருவத்தான்.

     பல் தொடுத்து அன்ன சூல் பல் கவடியன் - பற்களைத்
தொடுத்தாற் போன்றஉட்குடைவான பல பலகறைகளை அணிந்தவன்; கல்
தொடுத்து  அன்ன போலும் கழலினான் -
கற்களை ஒன்று  சேர
வைத்தாற் போன்ற திண்ணிய வீரக்கழலை உடையவன்; அல் தொடுத்தன்ன
குஞ்சியன் -
இருளைப் பின்னினாற் போன்ற கரிய தலை மயிரை
உடையவன்; ஆளியின்நெற்றொடு ஒத்து  தெரிந்த புருவத்தான் -
ஆளிச் செடியின் வற்றி உலர்ந்த காயைப் போன்றுநெறிப் புடைய
புருவத்தை உடையவன்.

     கவடி - பலகறை. சோழி எனவும் வழங்கும்.  தற்காலத்துக் குறவர்கள்
இவ்வகை மணிகளைச்கோத்தணிதல் கண்கூடு. ஆடவர் தலைமயிரைக்
குஞ்சி என்றல் வழக்கு. ஆளி நெற்று புருவ நெரிப்புக்குஉவமையாம்.     5

1958.பெண்ணை வன் செறும்பின் பிறங்கிச் செறி
வண்ண வன் மயிர் வார்ந்து உயர் முன் கையன்,
கண் அகன் தட மார்பு எனும் கல்லினன்,
எண்ணெய் உண்ட இருள் புரை மேனியான்.