பக்கம் எண் :

குகப் படலம் 383

     பெண்ணை வன் செறும்பின் பிறங்கிச் செறி - பனைமரத்தினது
வலிய சிறாம்பு போலவிளங்கி நெருங்கியுள்ள;  வண்ண வன் மயிர் -
கருநிறம் படைத்த வலிய மயிர்கள்; வார்ந்து உயர் முன் கையன் - நீண்டு
ஒழுகப்பெற்றுள்ள முன்கையை உடையவன்; கண் அகன்தடமார்பு எனும்
கல்லினன் -
இடமகன்ற விசாலமான மார்பு என்கின்ற கல்லினை
உடையவன்;  என்ணெய் உண்ட இருள்புரை மேனியன் - எண்ணெய்
பூசப் பெற்ற இருளை ஒத்த கரிய பளபளப்பானஉடம்பை உடையவன்.

     பனஞ்செறும்பு கருமைக்கும், மேல் குத்தி நிற்கும் தன்மைக்கும்,
முன்கை மயிர்க்கும்உவமையாம். “இரும்பனஞ் செறும்பின் அன்ன பரூஉ
மயிர்” “பனஞ் செறும்பு அன்ன பன் மயிர்முன்கை” என்பனவற்றை
நோக்குக.                                                     6

1959.கச்சொடு ஆர்த்த கறைக் கதிர் வாளினன்,
நச்சு அராவின் நடுக்குறு நோக்கினன்,
பிச்சராம் அன்ன பேச்சினன், இந்திரன்
வச்சிராயுதம் போலும் மருங்கினான்.

     கச்சொடு ஆர்த்த - அரைக்கச்சிலே கட்டிய;  கறை கதிர்
வாளினான்
-இரத்தக் கறை படிந்துள்ள ஒளிபடைத்த வாளை உடையவன்;
நச்சு அராவின் - விடம்பொருந்திய பாம்பைப் போல;  நடுக்குறு
நோக்கினன் -
பிறர் நடுக்கம் அடைகின்றகொடிய கண் பார்வை
உடையவன்; பிச்சாரம் அன்ன பேச்சினன் - பித்தர்களைப் போலஒன்றுக்
கொன்ற தொடர்பில்லாமல் பேசக்கூடிய பேச்சினை உடையவன்;  இந்திரன்
வச்சிராயுதம் போலும் மருங்கினான் -
தேவேந்தி ரனது  வச்சிராயுதம்
போல மிகவும் உறுதியான இடுப்பை உடையவன்,

     வேடர்கள் என்பதால் தெளிவற்ற பேச்சை உடையவன் என்றார்.
நடுப்பகுதி சிறந்து இரண்டுபக்கமும் பெருத்து  இருப்பதனால் வச்சிரப்படை
போலும் இடுப்பு என்றார்.                                        7

1960.ஊற்றமே மிக ஊனொடு மீன் நுகர்
நாற்றம் மேய நகை இல் முகத்தினான்,
சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான்,
கூற்றம் அஞ்சக் குமுறும் குரலினான்.1

     ஊற்றமே மிக - வலிமை மிகும்படி;  ஊனொடு மீன் நுகர் -
விலங்குகளின்இறைச்சியோடு மீனையும் தின்று;  நாற்றம் மேய - புலால்
நாற்றம் பொருந்திய;  நகை இல் முகத்தினான் - சிரிப்பு என்பது சிறிதும்
இல்லாத (கடு கடுப்பான) முகத்தினைஉடையவன்;  சீற்றம் இன்றியும் -
கோபம் இல்லாத போதும்;  தீ எழ நோக்குவான் -கனல் கக்குமாறு
பார்ப்பவன்; கூற்றம் அஞ்சக் குமுறும் குரலினான் - இயமனும்
பயப்படும்படிஅதிர்ந்து  ஒலிக்கின்ற குரலை உடையவன்.