புலால் நாறும் வாய், சிரிப்பற்ற முகம், கனல் பார்வை, இடிக்குரல் என்று வேட்டுவச்சாதி இயல்புக் கேற்பக் குகன் தன்மைகளைக் கூறினார். கூற்றம் - உம்மைதொக்கது. 8 1961. | சிறுங்கிபேரம் எனத் திரைக் கங்கையின் மருங்கு தோன்றும் நகர் உறை வாழ்க்கையன், ஒருங்கு தேனொடு மீன் உபகாரத்தன்,- இருந்த வள்ளலைக் காண வந்து எய்தினான். |
சிருங்கி பேரம் என - சிருங்கி பேரம் எனப் பெயர் பெற்று; திரைக் கங்கையின் - அலை வீசும் கங்கை யாற்றின்; மருங்கு தோன்றும் நகர்- பக்கத்தில் தோன்றுகின்ற நகரிலே; உறை வாழ்க்கையன் - தங்கி வாழ்கின்ற வாழ்க்கையை உடையவன் ஆகிய அவன்; இருந்த வள்ளலை - (முனிவர் தவச்சாலையில்)தங்கியிருந்த இராமபிரானை; காண - காண்பதற்கு; ஒருங்கு தேனொடு மீன்உபகாரத்தன்- ஒரு சேரத் தேனும் மீனும் என்ற கையுறைப் பொருளை ஏந்தியவனாய்; வந்துஎய்தினான்- வந்து சேர்ந்தான். சிருங்கி பேர நகர் அரசன் குகன், அயோத்தி அரசனாகிய இராமனைக் கையுறைப் பொருளாகத்தேனும் மீனும் கொண்டு காண வந்தான். “குகன் எனும் நாமத்தன்’ (1053.) என்பது முதல் இதுவரைகுகனது தன்மையும் வடிவும் கூறி, அவன் இராமனைக் காண வந்தான் எனமுடித்தார். 9 இராமன் இருந்த தவச்சாலையைக் குகன் அடைதல் 1962. | சுற்றம் அப் புறம் நிற்க, சுடு கணை வில் துறந்து, அரை வீக்கிய வாள் ஒழித்து, அற்றம் நீத்த மனத்தினன், அன்பினன், நல் தவப் பள்ளி வாயிலை நண்ணினான். |
சுற்றம் அப்புறம் நிற்க - உடன் வந்த வேட்டுவச் சுற்றம் வேறொரு பக்கத்தில்ஒதுங்கிநிற்க; சுடு கணை வில் துறந்து - பகைவரை அழிக்கும் அம்பையும் வில்லையும்விலக்கி வைத்து; அரை வீக்கிய வாள் ஒழித்து- இடைக்கச்சில் கட்டப்பெற்றவாளையும் நீக்கி; அற்றம் நீத்த மனத்தினன்- பொய்யற்ற தூய மனம் உடையவனாய்; அன்பினன்- இராமன்பால் கொண்ட சிறந்த பக்தி உடையவனாய்; நல் தவப் பள்ளிவாயிலை நண்ணினான் - நல்ல தவச்சாலையின் வாயிலை அடைந்தான். முனிவர் வாழும் இடத்துக்கு அருகில் உள்ளவன் ஆதலின், குகன் முனிவரது தவச்சாலையைஅனுகும்போது எவ்வாறு அணுகல் வேண்டும் என்பது அறிந்தவன். அன்றியும் இராமபக்தியுடன்செல்கின்றவன் வேட்டைக்குச் செல்வான் போல வில், அம்பு, வாள் ஆகியவற்றுடனும், சேனையுடனும் செல்லல் ஆகாதன்றோ? ஆதலின், அவற்றையெல்லாம் ஒழித்து அடக்க ஒடுக்கத்துடன்சென்றான் என்றார். 10 |