பக்கம் எண் :

குகப் படலம் 389

     சிங்க ஏறு அனைய வீரன் பின்னரும் செப்புவான் -
ஆண்சிங்கத்தை ஒத்த இராமன்மேலும் கூறுவான்; ‘யாம் இங்கு உறைந்து
நாளை எறி நீர்க் கங்கை ஏறுதும் -
நாங்கள்இத்தவச்சாலையில்
தங்கியிருந்து  நாளைக்கு அவைவீசும் கங்கையாற்றைக் கடந்து  செல்ல
எண்ணியுள்ளோம் (ஆதலின்);  நீ-; யாணர்ப் பொங்கும் நின்
கற்றத்தோடும் போய்-
புதுமை நிரம்பிய உன் உறவினர்களோடும் சென்று;
உன் ஊரில் உவந்து  இனிது  தங்கி -உன்னடைய நகரத்திலே மன
மகிழ்ச்சியோடு இனிமையாகத் தங்கியிருந்து;  விடியல் - நாளைவிடியலில்;
நாவாயோடும் சாருதி - மரக்கலங்களோடும்  வருவாயாக;’ என்றான்-.

     குகனைத் தொடர்ந்து புதிய புதிய உறவினர்கள் மேலும் மேலும் வந்த
வண்ணம் இருத்தலின்,‘யாணர்ப் பொங்கும் நின் சுற்றம்’ என்றான். புதியராய்
வந்தாரைக் காணப் பலரும் வருதல்உலகியல்பு.                      16

குகனது விண்ணப்பம்  

1969.கார் குலாம் நிறத்தான் கூற,
     காதலன் உணர்த்துவான், ‘இப்
பார் குலாம் செல்வ! நின்னை,
     இங்ஙனம் பார்த்த கண்ணை
ஈர்கிலாக் கள்வனேன் யான்,
     இன்னலின் இருக்கை நோக்கித்
தீர்கிலேன்; ஆனது, ஐய!
     செய்குவென் அடிமை’ என்றான்.

     கார் குலாம் நிறத்தான் கூற - மேகம் போல் உள்ள கரு நிறம்
உடையதிருமேனியனாகிய இராமன் இவ்வாறு கூற;  காதலன்
உணர்த்துவான் -
அவனிடத்தில் பேரன்புகொண்ட குகன் சொல்வான்;
‘இப் பார் குலாம் செல்வ! - இந்தப் பூமி முழுவதும் ஆளும்செல்வத்துக்
குரியவனே!’ நின்னை - உன்னை;  இங்ஙனம் பார்த்த கண்ணை -
இவ்வாறு  சடைமுடிக் கோலத்தோடு பார்த்த கண்களை;  ஈர்கிலாக்
கள்வனேன் யான் -
இதுகாறும் பிடுங்கி எறியாமல் உன்பால்
அன்புடையவன் போல நடிக்கின்ற திருடன் யான்; இன்னலின் இருக்கை
நோக்கி -
இத்தகைய துன்பத்தில் இருந்தபடியைப் பார்த்து; தீர்க்கிலேன்-
உன்னைப் பிரிய மாட்டாதவனாக இருக்கிறேன்;  ஆனது - என்நிலைமை
அவ்வாறாகியது; ஐய! - ஐயனே; அடிமை செய்குவென்’ - (உன்
அருகேயேஇருந்து உனக்குரிய) தொண்டுகளைச் செய்வேன்; என்றான்-.

     அரச குமாரனாகிய இராமன் முடிபுனையாது சடைமுடி தரித்த
கோலத்தோடு வந்தது கண்டு மனம் இரங்கித் தழுதழுத்த குகன் தன்னைத்
தாழ்மைப்