பக்கம் எண் :

மந்திரப் படலம் 39

விரும்பினால் ;  என் கட்டுரை கோடி - என் பயனுள்ளசொல்லைக்
கொள்வாய்.’

     உரிமை மைந்தர் - அறநூல்கள் புத்திரர்களின் வகைகள் சில
கூறுகின்றன.அவர்களுள் சிலர்க்குச் சில உரிமையே உண்டு. ஒருவனுக்கு
முறைப்படி பிறந்த மகனுக்கே எல்லாஉரிமைகளும் உண்டு. அத்தகைய
மைந்தர் என்றவாறு. மைந்தனைப் பெறுவதன் பயன் துயரம் நீங்கிநன்மை
அடைவதாகும். இதனைப் பின்னும், “பராவரும் புதல்வரைப் பயக்க யாவரும்,
உராவரும்துயரைவிட்டு உறுதி காண்பரால்” (1453) என்று குறிப்பர்.     62

1376. ‘மைந்த ! நம் குல மரபினில் மணி முடி வேந்தர்,
தம்தம் மக்களே கடன்முறை நெடு நிலம் தாங்க,
ஐந்தொடு ஆகிய முப் பகை மருங்கு அற அகற்றி,
உய்ந்து போயினர்; ஊழி நின்று எண்ணினும் உலவார்.

     ‘மைந்த - மகனே !  நம்குல மரபினில் மணிமுடி வேந்தர் -
நமது சிறந்த குலத்தில் தோன்றிய அழகிய முடிசூடி ஆண்ட வேந்தர்கள் ;
தம் தம்மக்களே - தம் தம் பிள்ளைகளே ;  கடன்முறை நெடு நிலம்
தாங்க
- முறைப்படிநெடிய உலகை அரசர்களாகிக் காப்பாற்ற; ஐந்தொடு
ஆகிய முப்பகை
- ஐந்துபொறிகளால் உண்டாகிய மூன்று பகைகளையும்;
மருங்கு அற அகற்றி - வேரோடுநீக்கி ;  உய்ந்து போயினர் -
பிழைத்துப் போனார்கள் ;  ஊழிநின்று எண்ணினும் - அவ்வாறு
உய்ந்தவர்களை ஊழிக்காலம் இருந்து எண்ணினாலும் ;  உலவார் -
குறையார் (எண்ணற்றவர் என்றவாறு)’

     ஐந்தொடு ஆகிய முப்பகை - ஐம்பொறிகளாகிய மெய், வாய், கண்,
மூக்கு,செவி ஆகியவற்றின் வாயிலாகப் புலப்படும் காமம், வெகுளி, மயக்கம்
என்னும் பகைகள். ஐந்தொடு- ஒடு உருபு ஐந்தால் எனப் பொருள்பட்டுக்
கருத்தாப் பொருளில் வந்தது. ‘ஊழி நின்று எண்ணினும்உலவார்’ என்றது
எவ்வளவு காலம் நின்று எண்ணினாலும் எண்ணி முடிவுகாண முடியாதவாறு
மிகப் பலராவர்என்பதனைக் காட்டிற்று.                           63

1377. ‘முன்னை ஊழ்வினைப் பயத்தினும்,
     முற்றிய வேள்விப்
பின்னை எய்திய நலத்தினும்,
     அரிதினின் பெற்றேன் ; 
இன்னம், யான் இந்த அரசியல்
     இடும்பையின் நின்றால்,
நின்னை ஈன்றுள பயத்தினின்
     நிரம்புவது யாதோ?

     ‘முன்னை ஊழ்வினைப் பயத்தினும் - முற்பிறப்பில் செய்த நல்
வினையின் விளைவாகவும் ;  பின்னை முற்றிய வேள்வி எய்தி நலத்