பக்கம் எண் :

390அயோத்தியா காண்டம்

படுத்திக்கொண்டு ‘இவ்வாறு பார்த்த கண்ணைப் பிடுங்கி எறியாமல் இன்னும்
உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேனே,  நான் ஒரு வஞ்சகன்’ என்ற
அவலித்த தாகக் கொள்க. இராமனுடனேயே  இருந்து தொண்டு செய்ய
வேண்டினான் குகன்.                                           17

குகன் வேண்டுகோளை இராமன் ஏற்றல்  

1970.கோதை வில் குரிசில், அன்னான்
     கூறிய கொள்கை கேட்டான்;
சீதையை நோக்கி, தம்பி
     திருமுகம் நோக்கி, ‘தீராக்
காதலன் ஆகும்’ என்ற,
     கருணையின் மலர்ந்த கண்ணன்.
‘யாதினும் இனிய நண்ப!
     இருத்தி ஈண்டு, எம்மொடு’ என்றான்.

     கோதை வில் குரிசில் - வெற்றிமாலை அணிந்த வில்லையுடைய
இராமன்;  அன்னான் கூறிய கொள்கை கேட்டான் - அக் குகனது
பேச்சில் வெளிப்பட்ட அவன் மனக்கருத்தைக் கேள்வி மூலம் அறிந்தான்;
சீதையை நோக்கி  - சீதையைப் பார்த்து; தம்பி திருமுகம் நோக்கி -
தம்பியாகிய இலக்குவனது  அழகிய முகத்தைப் பார்த்து  (இருவருக்கும்
குகனது  தோழமையில் உடன்பாடு என்பதைக் குறிப்பால் அறிந்து); ‘தீராக்
காதலன் ஆகும்’என்று -
நம்பால் என்றும் நீங்காத
பேரன்புடையவனாவான் என்று சொல்லி; கருணையின்மலர்ந்த
கண்ணன் -
கருணையால் மலர்ச்சியடைந்த கண்களை உடையவனாய்;
‘யாதினும் இனியநண்ப! - எல்லாப் பொருள்களினும் இனிமையான
நண்பனே; ஈண்டு எம்மொடு இருத்தி’ - இங்கே எங்களோடு (இன்று)
தங்கி இருப்பாயாக;’ என்றான்-.

     தம்பி முன்னரே குகனை அறிமுகப்படுத்தும்போதே இராமன்பால் தன்
உள்ளக்கிடக்கையைப்புலப்படுத்தினன் ஆதலின்,  இங்கே வேண்டப்படுவது
சீதையின் உடன்பாடே ஆதலின்,  அதனைமுதற்கண் கூறினார் - ‘யாரினும்
இனிய நண்ப’ என்னாது, ‘யாதினும்’ என அஃறிணை வாசகத்தாற்‘சொல்லி
மக்களே அன்றி அன்பு செய்தற்குரிய மற்றப் பொருள்களும் அடங்கக் கூறிய
நயம்அறிந்து  இன்புறத்தக்கது.                                   18

1971.அடி தொழுது உவகை தூண்ட
     அழைத்தனன், ஆழி அன்ன
துடியுடைச் சேனை வெள்ளம்,
     பள்ளியைச் சுற்ற ஏவி,
வடி சிலை பிடித்து, வாளும்
     வீக்கி, வாய் அம்பு பற்றி