| இடியுடை மேகம் என்ன இரைத்து அவண் காத்து நின்றான். |
அடி தொழுது - (இராமன் இன்று எம்மொடு தங்குக என்று சொல்லக் கேட்ட குகன்)இராமன் திருவடிகளை வணங்கி; உவகை தூண்ட - மகிழ்ச்சி மேல் மேல் மிக; ஆழிஅன்ன துடியுடைச் சேனை வெள்ளம் அழைத்தனன் - கடலை ஒத்த துடிப்பறையோடு கூடிய தனது சேனைப் பெருக்கை அழைத்து; பள்ளியைச் சுற்ற ஏவி - (விலங்கு முதலியவற்றால் துன்பம்நேராவாறு) அவர்கள் தங்கியுள்ள தவச்சாலையைச் சுற்றிப் பாதுகாக்கக் கட்டளையிட்டு; வரிசிலை பிடித்து - (தானும்) கட்டமைந்த வில்லைப் பிடித்து; வாளும் வீக்கி -(முன்பு கழித்த) வாளையும் அரைக்கச்சிலே கட்டி; வாய் அம்பு பற்றி - கூரிய அம்மைப்பிடித்து; இடியுடை மேகம் என்ன இரைத்து - இடியோடு கூடிய மழை மேகம் போல உரத்த சத்தம்இட்டு; அவண் - அத்தவச்சாலையில்; காத்து நின்றான் - அம்மூவரையும் காவல்செய்து நின்றான். இராமன் அனுமதி தந்த மகிழ்ச்சியால் அவனைக் காக்கும் பொறுப்பை மிகச் சிறப்பாகச்செய்கிறான் குகன். 19 இராமன் நகர் நீங்கிய காரணத்தை உசாவி அறிந்து குகன் வருந்துதல் 1972. | ‘திரு நகர் தீர்ந்த வண்ணம், மானவ! தெரித்தி’ என்ன, பருவரல் தம்பி கூற, பரிந்தவன் பையுள் எய்தி, இரு கண் நீர் அருவி சோர, குகனும் ஆண்டு இருந்தான், ‘என்னே! பெரு நிலக் கிழத்தி நோற்றும், பெற்றிலள் போலும்’ என்னா, |
‘மானவ - பெருமை படைத்தவனே!; திரு நகர் தீர்த்த வண்ணம் தெரித்தி’ என்ன- அயோத்தி நகரை விட்டு நீங்கி வனம் புகுந்த காரணத்தை விளக்கக் கூறுக என்று குகன்கேட்க; பருவரல் தம்பி கூற - துன்பத்தை உடைய இலக்குவன் எடுத்துச் சொல்ல; குகனும்பரிந்த வன் பையுள் எய்தி - குகனும் இரங்கியவனாய்த் துன்பமுற்று; இரு கண் நீர் அருவிசோர - இரண்டு கண்களிலிருந்து நீர் அருவிபோலக் கீழே விழ; ‘என்னே!பெருநிலக்கிழத்தி நோற்றும் - ஐயகோ! பெருநிலமகள் இராமனால் ஆளப்படுதற்கும் தவம்செய்திருத்தும்; பெற்றிலள் போலும்- அந்தப் பாக்கியத்தைப் பெற்றாளில்லையே; என்ன - என்று சொல்லி; ஆண்டு இருந்தான் - அத்தவச் சாலைக்குப் புறம்பேதங்கியிருந்தான். |