பக்கம் எண் :

குகப் படலம் 393

 மாலைவாய்ப் பாரின் பாயல் வைகினர்;
     வரி வில் ஏந்திக்
காலைவாய் அளவும், தம்பி
     இமைப்பிலன், காத்து நின்றான்.

     வைகல் மாலை வாய் - நாளின் மாலைக் காலத்தே; நியமம்
செய்து
-செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து;  மரபுளி இயற்றி -
செய்ய வேண்டிய கடமைகளைச்செய்து;  மரபுளி இயற்றி - செய்ய
வேண்டிய முறைப்படியே செய்து; வேலைவாய் அமுதுஅன்னாளும் -
பாற்கடலிலிருந்து தோன்றிய அமுதத்தை ஒத்தவளும்; வீரனும் -
இராமபிரானும்; பாரின் - பூமியில்; மாலை விரிந்த நாணல் பாயல்வாய்-
வரிசையாக விரிக்கப் பெற்ற நாணற்புல்லாகிய படுக்கையிலே;  வைகினர் -
உறங்கினராக;  தம்பி - இலக்குவன்;  காலைவாய் அளவும் - காலைப்
பொழுது வரும் வரை;  வரி வில் ஏந்தி - கட்டமைந்த வில்லை ஏந்தி; 
இமைப்பிலன் - கண்இமையாது;  காத்து நின்றான் - அவ்விருவரையும்
காவல் செய்து   நின்றுகொண்டேயிருந்தான்.

     இராமனும் சீதையும் உறங்க இலக்குவன் கண் உறங்காமல்  நின்று
கொண்டே காவல் செய்து கொண்டிருந்தான் என்பதாம். ‘மாலை விரிந்த
நாணல் பாயல்’ - மாலையாகவிரிந்த நாணற்புல் படுக்கை என்றவாறாம்.  22

குகன் இராம இலக்குவரை நோக்கி இரவு முழுதும் கண்ணீர் சோர நிற்றல்  

1975. தும்பியின் குழாத்தின் சுற்றும்
     சுற்றத்தன், தொடுத்த வில்லன்,
வெம்பி வெந்து அழியாநின்ற
     நெஞ்சினன், விழித்த கண்ணன்
தம்பி நின்றானை நோக்கி,
     தலைமகன் தன்மை நோக்கி,
அம்பியின் தலைவன் கண்ணீர்
     அருவி சோர் குன்றின் நின்றான்.

     அம்பியின் தலைவன் - நாவாய்களுக்குத் தலைவனான குகன்;
தும்பியின்சூழாத்தில் சுற்றும் சுற்றத்தன் - யானைக் கூட்டத்தைப்
போலச் சுற்றியிருக்கும் வேட்டுவக்கூட்டத்தை உடையனாய்;  தொடுத்த
வில்லன் -
நாண் ஏற்றி அம்பு பொருத்திய தயார்நிலையில் உள்ள வில்லை
உடையனாய்; வெம்பி வெந்து அழியா நின்ற நெஞ்சினன் -(இராமன்
வனம் புகுந்த நிலை கருதி) புழுங்கி நொந்து நைந்த மனத்தனாகி;  விழித்த
கண்ணன்-
இரவு முழுதும் விழித்த கண்ணனாய்;