தினும் - பிறகு இப்பிறப்பில் செய்து முடித்த வேள்வியால் அடைந்த நன்மையாலும் ; அரிதினின் பெற்றேன் - உன்னை அரிய பேறாகப் பெற்றேன் ; இன்னம் - இன்னமும் ; யான் இந்த அரசியல் இடும்பையின் நின்றால் -நான் இந்த அரச வாழ்க்கையாகிய துன்பத்தில் இருந்தால் ; நின்னை ஈன்றுளபயத்தினின் - உன்னைப் பெற்றதால் அடைந்த பயனால் ; நிரம்புவதுயாதோ - நிறைவது எவ்வாறு? முற்றிய வேள்வி - அசுவமேதம். புத்திரகாமேஷ்டி முதலியன. ‘மெய்யாயவேதத்துறை வேந்தருக்கு ஏய்ந்த யாரும் செய்யாத யாகம் இவன் செய்தும் மறந்த மாதோ’ என்றுதயரதன் செய்த வேள்விகள் பற்றி முன்னும் சொன்னார். (170) 64 1378. | ‘ஒருத்தலைப் பரத்து ஒருத்தலைப் பங்குவின் ஊர்தி எருத்தின், ஈங்கு நின்று, இயல்வரக் குழைந்து, இடர்உழக்கும் வருத்தம் நீங்கி, அவ் வரம்பு அறு திருவினை மருவும் அருந்தி உண்டு, எனக்கு ; ஐய ! ஈது அருளிடவேண்டும். |
ஒரு தலைப் பரத்து - ஒரு பக்கத்தில் பாரத்தையும் ; ஒருதலை - மற்றொரு பக்கத்தில் ; பங்குவின் - நொண்டியாய் இருக்கும் தன்மையையும் கொண்ட ; ஊர்தி எருத்தின் - மனிதன் ஊர்ந்து செல்லும் வண்டியில்பூட்டப்பட்ட பொதிமாட்டைப் போல ; ஈங்கு நின்று - இவ்வுலகிலிருந்து ; இயல்வரக் குழைந்து - தன்மை பொருந்த வருந்தி ; இடர் உழக்கும் வருத்தம்நீங்கி - துன்பப்படும் அரசபாரமாகிய வருத்தத்தினின்றும் அகன்று ; அவ்வரம்புஅறு திருவினை - அந்த எல்லையில்லாத முத்திச் செல்வத்தை; மருவும் அருத்திஎனக்கு உண்டு- பொருந்தும் ஆசை எனக்கு உள்ளது ; ஐய! ஈது அருளிடவேண்டும் - ஐயனே ! இதனை நீ கொடுக்க வேண்டும்.’ ஒரு பக்கம் சுமக்கமுடியாத பாரமும், மற்றொரு பக்கம் நொண்டிக் காலும்பெற்ற பொதிமாடு படும் பாட்டை ஆட்சிச் சுமையாலும், வயோதிகத்தாலும் தான் படுவதாகத் தயரதன்அறிவிக்கிறான். ஒருத்தலை - ஒருதலை என்பதன் விகாரம். பரம் - பாரம். ‘அந்தமில் இன்பம்’என்று சிலம்பும் ‘சென்றடையாத திரு’ என்று தேவாரமும் வீடுபேற்றினைக் குறித்தமை இங்குஒப்புநோக்கத்தக்கது. 65 1379. | ‘ஆளும் நல் நெறிக்கு அமைவரும் அமைதி இன்றாக நாளும் நம் குல நாயகன் நறை விரி கமலத் தாளின் நல்கிய கங்கையைத் தந்து, தந்தையரை |
|