முனிவன் தன்னுடன் தங்கியிருக்குமாறு இராமனை வேண்டுதல் 2027. | வைகினர் கதிர் நாறும் அளவையின் மறையோனும், ‘உய்குவெம் இவனோடு யாம் உடன் உறைதலின்’ என்பான், செய்தனன் இனிது எல்லாம்; செல்வனை முகம் முன்னா, ‘கொய் குல மலர் மார்ப! கூறுவது உளது’ என்றான்; |
வைகினர் - (மூவரும்) தங்கினர்; கதிர் நாறும் அளவையின் - சூரியன்தோன்றும் வைகறைப் போதின்கண்; மறையோனும் - பரத்துவாச முனிவனும்; ‘இவனோடுயாம் உடன் உறைதலின் உய்குவெம்’ என்பான் - ‘இவ் இராமனோடு யாம் சேரத் தங்கப்பெறுதலின் நற்கதி பெறுவோம்’ என்று கருதுபவனாய்; எல்லாம் இனிது செய்தனன் - இராமனுக்கு வேண்டுவ எல்லாம் இனிமையாகச் செய்து; செல்வனை முகம் முன்னா - இராமனைமுகம் நோக்கி; ‘கொய் குல மலர் மார்ப! - கொய்த கூட்டமான மலர்களை அணிந்தமார்பினை உடையாய்!; கூறுவது உளது’ - (உன்னிடத்தில்) யான் கூற வேண்டுவது உளது; என்றான் -. முன்னுதல் - கருதுதல் என்னும் பொருள் பெறும். இங்க ‘நோக்கி’ என்றதாம். 29 கலிநிலைத்துறை 2028. | ‘நிறையும், நீர், மலர், நெடுங் கனி, கிழங்கு, காய் கிடந்த’ குறையும் தீயவை; தூயவை குறைவு இல; எம்மோடு உறையும் இவ் வழி, ஒருங்கினில் உயர் தவம் முயல்வார்க்கு இறையும், ஈது அலாது இனியது ஓர் இடம் அரிது; இன்னும், |
‘நிறையும் நீர் - நீர் நிரம்பியுள்ளது; மலர், நெடுங்களி, கிழங்கு, காய் கிடந்த - பூக்களும், பெரும்பழங்களும், கிழங்குகளும், காய்களும் உள்ளன; தீயவை குறையும் - தீவினைகளும் போய்விடும்; தூயவை குறைவு இல - நற் செயல்களுக்குயாதொரு குறைவும் இல்லை; இவ் வழி- இவ்விடத்தில்; எம்மொடு உறையும் -எம்மோடு நீங்களும் வசியுங்கள்; ஒருங்கினில் உயர்தவம் முயல்வார்க்கு - மன ஒருமையால் |