கையிலிருந்து; அளிப்பது - கொடுப்பதனை; பாராய் - காண்பாயாக. சிறிதே வளைந்த தந்தம் பிறை மதி போலும், யானை இனங்களின் அன்புச்செறிவைஇப்பாடல் மூலம் அறியலாம். “பெருகு மதவேழம் மாப்பிடிக்கு முன் நின்று, இரு கண் இளமூங்கில்வாங்கி - அருகிருந்த, தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம்”, “வரை செய் மாக்களிறு இள வெதிர வளர்முளை அளைமிகுதேன் தோய்த்துப், பிரசவாரி தன்னிளம் பிடிக்கு அருள் செய்யும் பிரிதி(திவ்ய. 2256, 962.) என்னும் ஆழ்வார் திருமொழிகள் இங்கு ஒப்பு நோக்கத்தக்கன. 10 2056. | ‘அளிக்கும் நாயகன் மாயை புக்கு அடங்கினன் எனினும், களிப்பு இல் இந்தியத்து யோகியைக் கரக்கிலன்; அதுபோல், ஒளித்து நின்றுளர் ஆயினும் உருத் தெரிகின்ற பளிக்கு அறைச் சில பரிமுக மாக்களைப் - பாராய்! |
அளிக்கும் நாயகன் - (உலகினைக்) காக்கும் தெய்வமாகிய திருமால்; மாயைபுக்கு அடங்கினன் எனினும் - மாயையில் புகுந்து (தன் தன்மை பிறர்க்கு அறிய முடியாதபடி)மறைந்து அடங்கி நின்றான் என்றாலும்; களிப்பு இல் இந்தியத்து - புலன் வழி சென்றுகளித்தல் இல்லாத பொறிகளை உடைய; யோகியை - யோக சித்தியால் சிறந்ததவத்தரை; சுரக்கிலன் - ஒளிக்க மாட்டான்; அதுபோல் - அதுபோலவே; ஒளித்து நின்றுளர் ஆயினும் - உலகத்தார்க்குத் தம்மைக் காட்டாது ஒளித்து நின்றிருக்கின்றார்கள் ஆனாலும்; உருத்தெரிகின்ற பளிக்கு அறை - தம்மிடத்தேஉள்ளவற்றின் உருவத்தைத் தெளிவாகக் காட்டுகின்ற பளிங்குப்பாறையிலே (காணத் தோன்றும்); சில பரிமுக மாக்களை - சில குதிரை முகம் உடைய கின்னரர்களை; பாராய் - பார்ப்பாயாக. திருமால் மாயையால் மறைந்து நின்று பிறரால் அறிய வொண்ணா விடினும், யோகியர்க்குஅவன் தன்னை மறையான். பரமன் மாயையால் ஒளித்தவன் என்பதைக் கருடன் துதியால் (8252 - 62)உணர்க. பரிமுக மாக்கள் - குதிரை முகம் உடையவர் கின்னரர் ஆவர். உலகோர்க்குத் தம்மைக்காட்டாது மறைப்பர். ஆயினும், பளிங்குப் பாறையில் அவர் உரு வெளித்தோன்றும் என்க.பளிங்கில் மறைந்த உருத் தோன்றுதலை மணிமேகலை பளிக்கறை புக்க காதை யான்உணர்க. 11 2057. | ‘ஆடுகின்ற மா மயிலினும் அழகிய குயிலே! |
|