பக்கம் எண் :

சித்திரகூடப் படலம் 447

கையிலிருந்து; அளிப்பது - கொடுப்பதனை; பாராய் - காண்பாயாக.

     சிறிதே வளைந்த தந்தம் பிறை மதி போலும், யானை இனங்களின்
அன்புச்செறிவைஇப்பாடல் மூலம் அறியலாம். “பெருகு மதவேழம்
மாப்பிடிக்கு முன் நின்று,  இரு கண் இளமூங்கில்வாங்கி - அருகிருந்த,
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம்”, “வரை செய் மாக்களிறு இள வெதிர
வளர்முளை அளைமிகுதேன் தோய்த்துப், பிரசவாரி தன்னிளம் பிடிக்கு
அருள் செய்யும் பிரிதி(திவ்ய. 2256, 962.) என்னும் ஆழ்வார் திருமொழிகள்
இங்கு ஒப்பு நோக்கத்தக்கன.                                    10

2056.‘அளிக்கும் நாயகன் மாயை புக்கு
     அடங்கினன் எனினும்,
களிப்பு இல் இந்தியத்து யோகியைக்
     கரக்கிலன்; அதுபோல்,
ஒளித்து நின்றுளர் ஆயினும்
     உருத் தெரிகின்ற
பளிக்கு அறைச் சில பரிமுக
     மாக்களைப் - பாராய்!

     அளிக்கும் நாயகன் - (உலகினைக்) காக்கும் தெய்வமாகிய திருமால்;
மாயைபுக்கு அடங்கினன் எனினும் - மாயையில் புகுந்து (தன் தன்மை
பிறர்க்கு அறிய முடியாதபடி)மறைந்து அடங்கி நின்றான் என்றாலும்;
களிப்பு இல் இந்தியத்து - புலன் வழி சென்றுகளித்தல் இல்லாத
பொறிகளை உடைய;  யோகியை - யோக சித்தியால் சிறந்ததவத்தரை;
சுரக்கிலன் - ஒளிக்க மாட்டான்;  அதுபோல் - அதுபோலவே;  ஒளித்து
நின்றுளர் ஆயினும் -
உலகத்தார்க்குத் தம்மைக் காட்டாது ஒளித்து
நின்றிருக்கின்றார்கள் ஆனாலும்; உருத்தெரிகின்ற பளிக்கு அறை -
தம்மிடத்தேஉள்ளவற்றின் உருவத்தைத் தெளிவாகக் காட்டுகின்ற
பளிங்குப்பாறையிலே (காணத் தோன்றும்); சில பரிமுக மாக்களை - சில
குதிரை முகம் உடைய கின்னரர்களை; பாராய் - பார்ப்பாயாக.

     திருமால் மாயையால் மறைந்து  நின்று பிறரால் அறிய வொண்ணா
விடினும்,  யோகியர்க்குஅவன் தன்னை மறையான்.  பரமன் மாயையால்
ஒளித்தவன் என்பதைக் கருடன் துதியால் (8252 - 62)உணர்க.  பரிமுக
மாக்கள் - குதிரை முகம் உடையவர் கின்னரர் ஆவர். உலகோர்க்குத்
தம்மைக்காட்டாது மறைப்பர். ஆயினும், பளிங்குப் பாறையில் அவர் உரு
வெளித்தோன்றும் என்க.பளிங்கில் மறைந்த உருத் தோன்றுதலை
மணிமேகலை பளிக்கறை புக்க காதை யான்உணர்க.                  11

2057.‘ஆடுகின்ற மா மயிலினும்
     அழகிய குயிலே!