பக்கம் எண் :

448அயோத்தியா காண்டம்

 கூடுகின்றிலர், கொடிச்சியர்
     தம் மனம் கொதிப்ப
ஊடுகின்றனர், கொழுநரை
     உருகினர் நோக்கப்
பாடுகின்றன, கின்னர
     மிதுனங்கள் - பாராய்!

     ஆடுகின்ற மா மயிலினம் அழகிய குயிலே! - (கார் கண்டு
களிப்புற்றுத் தோகைவிரித்து) ஆடுகின்ற சிறந்த மயிலைக்காட்டிலும்
(சாயலால்) அழகுடைய குயில்போலும் குரல்உடையவளே!; கொடிச் சியர்-
குற மகளிர்;  தம்மனம் கொதிப்ப ஊடுகின்றனர் -தம் மனம்
கொதிக்கின்றபடியால் (கணவர் மேல்) ஊடல் கொண்டவராய்;
கூடுகின்றிலர் -(கணவரைக்) கூடாமல் இருக்கின்ற அவர்;  கொழுநரை -
தம் கணவரை;  உருகினர் -(தாமே) அன்பினால் உருகியவர்களாய்க்
(கூடுதற்குறிப்பினால்); நோக்க -பார்க்கும்படி; கின்னர மிதுனங்கள் -
ஆணும் பெண்ணுமாய் இணைந்திருக்கும் கின்னரமிதுனங்கள்;
பாடுகின்றன-; பாராய்-.

     ஊடலாற் பிரிந்த குறத்தியரைக் கணவர்பால் தம் பாடலாற் கின்னர
மிதுனங்கள் சேர்த்துவைப்பனவாயின என்பது கருத்து. கின்னர மிதுனம் -
மனித முகமும் குதிரை உடலும் புடைத்து ஆனும்பெண்ணுமாய் இணைந்தே
இருந்து கின்னரம் என்னும் இசைக்கருவி கொண்டு பாடும் தன்மை உள்ள
தேவசாதியினர்.                                                12

2058.‘வில்லி’ வாங்கிய சிலை எனப்
     பொலி நுதல் விளக்கே!
வல்லிதாம் கழை தாக்கலின்
     வழிந்து இழி பிரசம்,
கொல்லி வாங்கிய குன்றவர்
     கொடி நெடுங் கவலை
கல்லி வாங்கிய குழிகளை
     நிறைப்பன - காணாய்.

     வில்லி வாங்கிய சிலை எனப் பொலிநுதல் விளக்கே! -
வில்லுடைய வீரன் வளைத்தவில்போன்ற புருவத்தால் விளங்குகின்ற
நெற்றியை உடைய விளக்குப் போன்றவளே!;  வல்லிதாம் -
கொடிகள்;
கழை கழை தாக்கலின் - மூங்கில் மோதுவதால்; வழிந்து இழி பிரசம் -
தம்மிடத்துள்ள தேனடை கெட்டு இழிகின்ற தேனானது; கொல்லிவாங்கிய
குன்றவர் -
கொல்லிப் பண்ணைக் கேட்கி்ன்ற குறவர்கள்; நெடுங் கொடிக்
கவலை -
நீண்ட கொடிகளை உடைய கவலைக்