பக்கம் எண் :

சித்திரகூடப் படலம் 453

  விஞ்சை நாடியர் கொழுநரோடு
     ஊடிய விமலப்
பஞ்றசு அளாவிய சீறடிச்
     சுவடுகள் - பாராய்!

     விஞ்சை நாடியர் கொழுநரோடு ஊடிய - வித்தியாதர உலகத்தில்
உள்ள மகளிர் தம்கணவரோடு ஊடல் கொண்டதனால்;  விமலப் பஞ்சு
அளாவிய சீறடிச் சுவடுகள் -
(கோபத்தில்நடந்த) அவர்களது  குற்றமற்ற
செம்பஞ்சுக் குழம்பு தீட்டப் பெற்ற சிறிய பாதங்களின் சுவடுகள்;மஞ்சு
அளாவிய மாணிக்கப் பாறையில் மறைவ -
மேகங்கள் நெருங்கியுள்ள
மலைமேல் உள்ளமாணிக்கப் பாறைகளில் மறைகின்றன; செஞ்செவே நெடு
மரகதப் பாறையில் தெரிவ -
செம்மை யாக நீண்ட பச்சை நிறமுள்ள
மரகதப் பாறைகளில் நன்கு தோன்றுகின்றன;  காணாய் -.

     செம்பஞ்சுக் குழம்பு பூசிய அடிச்சுவடுகள் நடந்து  சென்று வழியில்
செந்நிறமுள்ள மாணிக்கப்பாறையில் நிறவேற்றுமை இன்மையால் மறைந்து
விடுகின்றன;  அதே சுவடுகள் பச்சைநிறவேற்றமையால் மரகதப் பாறையில்
நன்றாகத் தெரிகின்றன என்றவாறாகும். ஊடல் கொண்ட  மகளிர்கணவரை
வெறுத்தாற் போன்ற குறிப்புடன் பாறைமேல் நடந்து  சென்றனர். ஆதலின்
செம்பஞ்சுதீட்டிய அவர்களது பாதச் சுவடுகள் பாறையில் தெரிவனவும்
மறைவனவும் ஆயின. செஞ்செவே - நேராக.                        20

2066.‘கழித்த செம்பொனின் தொளைபுரை
     உந்தியின் துணையே!
கொழித்த மா மணி அருவியொடு
     இழிவன, கோலம்
அழித்து மேவிய அரம்பையர்
     அறல் புரை கூந்தல்
கழித்து நீக்கிய கற்பக
     நறு மலர் - காணாய்!

     அழித்த செம்பொனின் தொளைபுரை உந்தியின் துணையே! -
கழியாகச் செய்யப்பெற்றசெம்பொன்னால் ஆகிய தொளையை ஒத்திருக்கின்ற
தொப்புளை உடைய இனிய வாழ்க்கைத்துணைவியே!;  கோலம் அழித்து
மேவிய அரம்பையர் -
(அருவியில் நீராட  வந்து)தம்முடைய பழைய
கோலத்தைக் களைத்து நீராடிய அரம்பை மாதர்கள்; அறல்புரை கூந்தல்
கழித்து நீக்கிய -
தமதுத கருமணலை ஒத்த கூந்தலிலிருந்து  எடுத்து
எறிந்த; கற்பகநறுமலர் - கற்பக மரத்தின் மணமுள்ள மலர்கள்; மாமணி
கொழித்த அருவியொடு  இழிவன -
சிறந்த இரத்தினங்களைக்
கொழித்துக்கொண்டு வருகின்ற  மலை அருவியோடு இறங்கிவருவனவற்றை;
காணாய் -.