| விஞ்சை நாடியர் கொழுநரோடு ஊடிய விமலப் பஞ்றசு அளாவிய சீறடிச் சுவடுகள் - பாராய்! |
விஞ்சை நாடியர் கொழுநரோடு ஊடிய - வித்தியாதர உலகத்தில் உள்ள மகளிர் தம்கணவரோடு ஊடல் கொண்டதனால்; விமலப் பஞ்சு அளாவிய சீறடிச் சுவடுகள் - (கோபத்தில்நடந்த) அவர்களது குற்றமற்ற செம்பஞ்சுக் குழம்பு தீட்டப் பெற்ற சிறிய பாதங்களின் சுவடுகள்;மஞ்சு அளாவிய மாணிக்கப் பாறையில் மறைவ - மேகங்கள் நெருங்கியுள்ள மலைமேல் உள்ளமாணிக்கப் பாறைகளில் மறைகின்றன; செஞ்செவே நெடு மரகதப் பாறையில் தெரிவ - செம்மை யாக நீண்ட பச்சை நிறமுள்ள மரகதப் பாறைகளில் நன்கு தோன்றுகின்றன; காணாய் -. செம்பஞ்சுக் குழம்பு பூசிய அடிச்சுவடுகள் நடந்து சென்று வழியில் செந்நிறமுள்ள மாணிக்கப்பாறையில் நிறவேற்றுமை இன்மையால் மறைந்து விடுகின்றன; அதே சுவடுகள் பச்சைநிறவேற்றமையால் மரகதப் பாறையில் நன்றாகத் தெரிகின்றன என்றவாறாகும். ஊடல் கொண்ட மகளிர்கணவரை வெறுத்தாற் போன்ற குறிப்புடன் பாறைமேல் நடந்து சென்றனர். ஆதலின் செம்பஞ்சுதீட்டிய அவர்களது பாதச் சுவடுகள் பாறையில் தெரிவனவும் மறைவனவும் ஆயின. செஞ்செவே - நேராக. 20 2066. | ‘கழித்த செம்பொனின் தொளைபுரை உந்தியின் துணையே! கொழித்த மா மணி அருவியொடு இழிவன, கோலம் அழித்து மேவிய அரம்பையர் அறல் புரை கூந்தல் கழித்து நீக்கிய கற்பக நறு மலர் - காணாய்! |
அழித்த செம்பொனின் தொளைபுரை உந்தியின் துணையே! - கழியாகச் செய்யப்பெற்றசெம்பொன்னால் ஆகிய தொளையை ஒத்திருக்கின்ற தொப்புளை உடைய இனிய வாழ்க்கைத்துணைவியே!; கோலம் அழித்து மேவிய அரம்பையர் - (அருவியில் நீராட வந்து)தம்முடைய பழைய கோலத்தைக் களைத்து நீராடிய அரம்பை மாதர்கள்; அறல்புரை கூந்தல் கழித்து நீக்கிய - தமதுத கருமணலை ஒத்த கூந்தலிலிருந்து எடுத்து எறிந்த; கற்பகநறுமலர் - கற்பக மரத்தின் மணமுள்ள மலர்கள்; மாமணி கொழித்த அருவியொடு இழிவன -சிறந்த இரத்தினங்களைக் கொழித்துக்கொண்டு வருகின்ற மலை அருவியோடு இறங்கிவருவனவற்றை; காணாய் -. |