பக்கம் எண் :

46அயோத்தியா காண்டம்

     இறைவன் சொல் எனும் இன் நறவு - அரசனாகிய தயரதன்
சொன்ன சொல்லாகிய இனியகள்ளை; அருந்தினர் யாரும் - பருகிய
அரசர்கள் முதலிய அனைவரும்; முறையில் நின்றிலர்- முறையில்
நில்லாதவர்களாய்;  முந்துறு களியிட மூழ்கி - எழுகின்ற களிப்பு என்னும்
வெள்ளத்தில் மூழ்கி;  நெஞ்சிடை நிறையும் உவகை போய் -  தங்கள்
மனத்தில் நிறைந்தமகிழ்ச்சியானது கரைகடந்து  போய்; மயிர் வழி நிமிர -
மயிர்க்கால்களில் வழியேவெளிப்பட;  உறையும் விண்ணகம் - உடல்
நீங்கியபின் நல்வினை புரிந்த உயிர்கள் சென்றுதங்கும் துறக்கத்தை; 
உடலொடும் எய்தினர் ஒத்தார் - இவ்வுடம்புடனே அடைந்தவர்
போலாயினர்.

     சொல் நறவு - உருவகம்,  அரசன் சொல்லைக் கேட்டவர் தம்
நிலைமறந்து உவகை வெளிப்படப்பெருமகிழ்ச்சியுற்றனர் என்பதாம். 
‘உடலொடும் துறக்கம் எய்தினர் ஒத்தார்’ என்னும் உவமைமுன்னும்
‘உடம்பொடு துறக்க நகர் உற்றவரை ஒத்தாதர்’ (1160) என வருதல் காணலாம். உறையும்விண்ணகம் - நல்வினை புரிந்த உயிர் சென்று உறையும்
துறக்கம்                                                 74

1388.ஒத்த சிந்தையர் உவகையின்
     ஒருவரின் ஒருவர்
தத்தமக்கு உற்ற அரசு எனத்
     தழைக்கின்ற மனத்தர்;
முத்த வெண்குடை மன்னனை
     முறைமுறை தொழுதார்
‘அத்த! நன்று’ என,
     அன்பினோடு அறிவிப்பது ஆனார்.

     உவகையின் ஓத்த சிந்தையர் - (அவ்வரசர்கள்) மகிழ்ச்சியினால்
இராமபிரான்முடிசூடுதலில்  ஒத்த கருத்துடையவர்களாய்;  ஒருவரின்
ஒருவர் அரசு தம் தமக்கு உற்ற என -
ஒருவரைப் போல ஒருவர் அரசு
தத்தமக்குக் கிடைத்ததுபோல;  தழைக்கின்ற மனத்தர் - மகிழ்ச்சிமிகும்
மனமுடையவர்கள்; முத்த வெண்குடை மன்னனை - முத்துகள்
பதிக்கப்பட்ட வெண்கொற்றக்குடையையுடைய தயரத மன்னனை; முறை
முறை தொழுதார்
- வரிசை வரிசையாய் நின்று வணங்கினார்கள்;‘அத்த
நன்று என -
ஐயனே! தங்கல் கருத்து நல்லதே’ என்று அன்பினோடு
அறிவிப்பதுஆனார்
- கனிவோடு தங்கள் கருத்தை அவனுக்குத்
தெரிவிக்கலாயினர்.

     இராமபிரான் மக்களொடு கலந்து  பழகும்  நீர்மையுடையவனாதலின்
அவனுக்கு அரசு கிடைப்பதைத்தமக்குக் கிடைப்பது போல யாவரும்
பாராட்டுவராயினர். சுமந்திரன் இத்தகைய எண்ணமுடையவனாய்இருந்தமை,
“தலங்கள் யாவையும் பெற்றனன் தான் எனத் தளிர்ப்பான்”  (1361)  என்று
குறிக்கப்பட்டுள்ளது.                                        75