கலிவிருத்தம் 1389. | ‘மூ - எழு முறைமை எம் குலங்கள் முற்றுறப் பூ எழு மழுவினால் பொருது போக்கிய சேவகன் சேவகம் செகுத்த சேவகற்கு, ஆவ இவ் உலகம்; ஈது அறன்’ என்றார் அரோ. |
‘மூ எழு முறைமை - இருபத்தொரு தலைமுறை; எம் குலங்கள் முற்றுற - எங்கள்அரசர் குடியெல்லாம் அழியுமாறு; பூ எழு மழுவினால் பொருது போக்கிய சேவகன் சேவகம் -கூர்மை பொருந்திய மழுப்படையினால் போர் செய்து இல்லாமற் செய்த வீரனாகிய பரசுராமனது வீரத்தை; செகுத்த சேவகற்கு - கெடுத்த வீரனாகிய இராமனுக்கு; இ உலகம் ஆவ - இந்த உலகம்உரிமையாவதாக! ஈது அறன் என்றார் - இச்செயல் அறத்தொடு பொருந்தியதே’ என்றுசொன்னார்கள். அரோ - அசை. பரசுராமனது செருக்கை அழித்தபோதே இராமனுக்கு இவ்வுலகம் தகுதியால் உரிமையாயிற்று;இதனை வெளிப்படுத்தி முடிசூட்டுதல் மிகறவும் ஏற்புடைத்தே என அரசர் தம் எண்ணத்தை உவமையோடு தெரிவித்தனர். பூ - கூர்மை. 76 தயரதன் வினாவும் வேத்தவையின் விடையும் 1390. | வேறு இலா மன்னரும் விரும்பி, இன்னது கூறினார்; அது மனம் கொண்ட கொற்றவன், ஊறின உவகையை ஒளிக்கும் சிந்தையான். மாறும் ஓர் அளவை சால் வாய்மை கூறினான். |
வேறு இலா மன்னரும் விரும்பி - கருத்து மாறுபாடில்லாத மன்னரும் இராமன் முடிசூடுதலை விரும்பி; இன்னது கூறினார் - இவ்வாறு கூறினர்; அது மனம் கொண்ட கொற்றவன் -அதனைக் கருத்தில் கொண்ட தயரதன்; ஊறின உவகையை ஒளிக்கும் சிந்தையான் - தன்னுள்ளேசுரந்த மகிழ்ச்சியை வெளிப்படாது மறைக்கும் கருத்தினனாய்; மாறும் ஓர் - பிறிதொரு;அளவை சால்வாய்மை கூறினான் - (அவர்கள் மனத்தை) அளத்தற்குரிய ஒரு வாய்ச்சொல்லைச்சொன்னான். வேறிலா மன்னர் - கருத்தொருமித்த மன்னர்கள். வாய்மை - வாய்ச்சொல். அளவை சால்வாய்மை - அளந்தறியும் சொல். 77 1391. | ‘மகன்வயின் அன்பினால் மயங்கி, யான் இது புகல, நீர் புகன்ற இப் பொம்மல் வாசகம், உகவையின் மொழிந்ததோ? உள்ளம் நோக்கியோ? தகவு என நினைந்தது எத் தன்மையால்?’ என்றான். |
|